டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

மலையாளத்தில் இளம் முன்னணி நடிகராக வளர்ந்து விட்ட நடிகர் டொவினோ தாமஸ் தான் தேர்ந்தெடுக்கும் வித்தியாசமான கதை, வித்தியாசமான கதாபாத்திரங்கள் மூலம் படத்திற்கு படம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் அடுத்ததாக அவர் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் அஜயண்டே இரெண்டாம் மோஷனம். ஜித்தின் லால் என்பவர் இயக்கி உள்ள இந்த படம் மூன்று விதமான காலகட்டங்களில் நடைபெறும் விதமாக உருவாகியுள்ளது. இதில் டொவினோ தாமஸ் மூன்று வேடங்களில் நடித்துள்ளார். கதாநாயகிகளாக கிர்த்தி ஷெட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ், சுரபி லட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர். வரும் செப்டம்பர் 12ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கும் நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியானது.
இந்த நிலையில் இந்த டிரைலரை கேஜிஎப், சலார் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் பிரசாந்த் நீல் மற்றும் கேஜிஎப் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் ஆகியோர் சமீபத்தில் பார்த்து ரசித்ததுடன் இந்த படத்தின் கதை அம்சம், மேக்கிங், டொவினோ தாமஸின் நடிப்பு உள்ளிட்டவை குறித்து சிலாகித்து பாராட்டியுள்ளனர். இதனைத் தொடர்ந்து மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைந்துள்ள டொவினோ தாமஸ் இது குறித்த புகைப்படங்களை தனது சோசியல் மீடியாவில் பதிவிட்டு உங்களது பாராட்டு எங்களை இன்னும் பெரு மகிழ்ச்சி அடைய வைக்கிறது என்று கூறியுள்ளார்.




