300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
பாகுபலி படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் இந்தியாவையும் தாண்டி வெளிநாட்டில் வசிக்கும் ரசிகர்களிடமும் பிரபலமானவர் நடிகர் ராணா டகுபட்டி. அதைத் தொடர்ந்து சில படங்களில் கதாநாயகனாகவும், சில படங்களில் வில்லனாகவும் நடித்து வருகிறார் ராணா. சமீபத்தில் சிகாகோ பயணம் மேற்கொண்டிருந்த ராணா அங்கிருந்து ஊர் திரும்பும்போது சிகாகோவில் நடைபெற்ற ஒரு ரசிகருடனான சந்திப்பு சோசியல் மீடியாவில் வீடியோவாக வெளியாகி பாராட்டுகளை பெற்று வருகிறது.
அதாவது சிகாகோவில் இருந்து கிளம்புவதற்காக விமான நிலையத்தை நோக்கி ராணா காரில் வந்திருக்கிறார். அப்போது பின் தொடர்ந்து வந்த காரில் இருந்து ஒரு ரசிகர் கண்ணாடியை இறக்கி ராணாவிற்கு ஹாய் சொல்கிறார். இதனை தொடர்ந்து காரை ஓரமாக நிறுத்திவிட்டு காரை விட்டு இறங்குகிறார் ராணா.
பின்தொடர்ந்து வந்த காரில் இருந்து அந்த ரசிகர் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அனைவரும் ராணாவின் இந்த செயலால் இன்ப அதிர்ச்சி அடைந்து காரில் இருந்து இறங்கி அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அவர்களது காரின் பானெட்டிலும் ரசிகரின் சட்டையிலும் ஆட்டோகிராப் போட்டு தந்தார். ரசிகரை பார்த்ததும் ஒரு ஹாய் கூட சொல்லாமல் கார் கண்ணாடியை இறக்காமல் செல்லும் சில ஹீரோக்களுக்கு மத்தியில் ரசிகரை மதித்து அதுவும் வெளிநாட்டில், ராணா இப்படி நடந்து கொண்ட செயல் நெட்டிசன்களால் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது.