‛வட சென்னை' பின்னணியில் வெற்றிமாறன் - சிம்பு படம்: அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் தாணு | அக்டோபர் முதல் வாரத்தில் நெட்பிளிக்ஸில் வெளியாகும் ‛வார்-2' | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் டிக்கெட் முன்பதிவு எத்தனை கோடி? | பைனான்ஸ் பிரச்னை காரணமாக ஜேசன் சஞ்சய் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தமா? | தனுஷின் ‛இட்லி கடை' படத்தை வெளியிடும் இன்பன் உதயநிதி! | உங்களை விட்டால் யார் இருக்கா ? அனுஷ்காவிடம் ராணா கலாட்டா | பிஜூமேனன் நடிப்பதாக இருந்த ‛கீர்த்தி சக்ரா' ; மோகன்லாலுக்கு கை மாறியது ஏன் ? இயக்குனர் மேஜர் ரவி புதிய தகவல் | நிவின்பாலியின் படங்களை பாராட்டிய பவன் கல்யாண் | ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் வசனம் இல்லாமல் வெளியாகும் ‛உப் யே சியாபா' | யார் இடத்தையும் யாரும் பிடிக்கவில்லை: சிவகார்த்திகேயன் |
அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய நேரம் படத்தில் அறிமுகமான நடிகை நஸ்ரியா முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தவர். அதைத் தொடர்ந்து தமிழில் ராஜா ராணி, நையாண்டி, மலையாளத்தில் பெங்களூரு டேய்ஸ், ஓம் சாந்தி ஓசானா உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார். ஆனாலும் பீக்கில் இருந்த சமயத்தில் நடிகர் பஹத் பாசிலை காதலித்து திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு கொஞ்ச காலம் ஒதுங்கினார். இந்த நிலையில் மீண்டும் ட்ரான்ஸ், அண்டே சுந்தரானிக்கி என சமீபகாலமாக செலெக்ட்டிவ்வான படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் நஸ்ரியா.
தற்போது மலையாளத்தில் உருவாகி வரும் சூட்சும தர்ஷினி என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் நஸ்ரியா. கடந்த மே மாத இறுதியில் துவங்கிய இதன் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த நிகழ்வை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். கடந்த 2018ல் மலையாளத்தில் வெளியான நான்சென்ஸ் என்கிற படத்தை இயக்கிய எம்.சி ஜிதின் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். இதில் கதாநாயகனாக மின்னல் முரளி இயக்குனரும் கடந்த வருடம் வெளியாகி வெற்றி பெற்ற ஜெய ஜெய ஜெய ஜெய ஹே மற்றும் சமீபத்தில் வெளியான குருவாயூர் அம்பல நடையில் உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்தவருமான பஷில் ஜோசப் நடிக்கிறார்.