மூக்குத்தி அம்மன் 2 துவக்க விழா : மத்திய அமைச்சர் உள்ளிட்ட விருந்தினர்களை காக்க வைத்த நயன்தாரா | டிவியை தொடர்ந்து ஓடிடியிலும் 'மார்கோ' ஒளிபரப்ப தடை? | மலையாள தயாரிப்பாளர் சங்கம் ஸ்டிரைக் தற்காலிக தள்ளிவைப்பு | கடைசிவரை முரட்டு சிங்கிள் தான் - எதிர்நீச்சல் பார்வதி | 'லூசிபர்' ரீ ரிலீஸ்; ரசிகர்கள் மீது இரட்டிப்பு சுமை ஏற்றும் 'எம்புரான்' | பின் வாங்கியது 'அஸ்திரம்' : நாளை 8 படங்கள் ரிலீஸ் | சஞ்சீவ் விஷயத்தில் நான் அப்படி செய்திருக்க கூடாது - ஸ்ரீ வருத்தம் | கல்பனா தற்கொலை முயற்சியா? : மகள் விளக்கம் | இன்னொரு இயக்குனரை நடிகராக களத்தில் இறக்கும் ஏஜிஎஸ் நிறுவனம் | சுவாசிகாவிற்கு லேசான காயம் |
தெலுங்கு திரையுலகின் பிரபல இயக்குனர் பூரி ஜெகன்நாத். மகேஷ்பாபு, ராம்சரண், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களை வைத்து ஹிட் படங்களை கொடுத்தவர். கடைசியாக இவர் விஜய் தேவரகொண்டாவை வைத்து இயக்கிய லைகர் படம் தோல்வியடைந்த நிலையில் தற்போது ராம் பொத்தினேனியை வைத்து டபுள் ஐ ஸ்மார்ட் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் விரைவில் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
பூரி ஜெகன்நாத்தின் மகன் ஆகாஷ் பூரி, ராம்சரண் கதாநாயகனாக அறிமுகமாகிய சிறுத்தா படத்தில் ஜூனியர் ராம் சரணாக நடித்தவர். அதன்பிறகு பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர் 2015ல் ஆந்திரா பொறி என்கிற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். 2018ல் தனது தந்தை இயக்கிய மெகபூபா என்கிற படத்திலும் கதாநாயகனாக நடித்தார். இந்த படம் ஓரளவு வெற்றி படமாக அமைந்தது.
ஆனாலும் அதன் பிறகு அவர் நடித்த ரொமான்டிக் மற்றும் சோர் பஜார் ஆகிய படங்கள் பெரிய வரவேற்பு பெறவில்லை. இந்த நிலையில் தான் சமீபத்தில் தனது 27ஆவது பிறந்தநாளை கொண்டாடிய ஆகாஷ் பூரி, இன்றிலிருந்து தனது பெயரை ஆகாஷ் ஜெகன்நாத் என மாற்றிக் கொண்டுள்ளதாக புதிய அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
சமீபகாலமாக திரையுலகில் தனக்கு சரியான முன்னேற்றம் இல்லை என்பதால் இந்தப்பெயர் மாற்றம் தன்னை வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்லும் என நம்பிக்கை கொண்டு தனது பெயரை தற்போது அவர் மாற்றி உள்ளதாக சொல்லப்படுகிறது.