இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
சமீபத்தில் வெளியான தனது ஐம்பதாவது படமான மகாராஜாவின் மிகப்பெரிய வெற்றியால் உற்சாகத்தில் இருக்கிறார் நடிகர் விஜய்சேதுபதி. வெவ்வேறு மொழிகளில் வில்லனாக அல்லது குணச்சித்திர நடிகராக நடிப்பதால், தமிழில் இவர் கதாநாயகனாக நடித்து வரும் படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்த நிலையில் மீண்டும் கதாநாயகனாக ஒரு வெற்றி படத்தை கொடுத்துள்ளார் விஜய்சேதுபதி. இதனை தொடர்ந்து இந்த படத்தின் வெற்றி சந்திப்பு மற்றும் புரமோஷன் நிகழ்ச்சிகள் என பிசியாக வலம் வருகிறார் விஜய் சேதுபதி. இந்த நிலையில் தான் ராம் சரண் அடுத்ததாக நடிக்க உள்ள அவரது 16வது படத்தின் தகவல்கள் பற்றி விஜய்சேதுபதி சில அப்டேட் தகவல்களை தெரிவித்துள்ளார். ராம்சரண் படத்தின் விவரங்களை இவர் சொல்வதற்கு காரணமும் இருக்கிறது.
இந்த படத்தை இயக்கப்போகும் இயக்குனர் புஜ்ஜி பாபு சனா ஏற்கனவே தெலுங்கில் உப்பென்னா என்கிற ஹிட் படத்தை கொடுத்தவர். அந்த படத்தில் கிர்த்தி ஷெட்டி என்கிற கதாநாயகியை அறிமுகப்படுத்தியதுடன் விஜய் சேதுபதிக்கும் முக்கியமான வில்லன் கதாபாத்திரம் கொடுத்து தெலுங்கு ரசிகர்களிடமும் அவரை பற்றி பேச வைத்தார்.
சமீபத்தில் ஐதராபாத் சென்றிருந்த விஜய்சேதுபதி, இயக்குனர் புஜ்ஜி பாபு சனாவை நேரில் சந்தித்துள்ளார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதியும் நடிக்கிறார். கதாநாயகியாக ஜான்வி கபூர் நடிக்கும் இந்த படம் ஒரு ஸ்போர்ட்ஸ் பின்னணியில் உருவாகிறது என்றும் இதன் கதையை வலுவாக அவர் உருவாக்கி இருக்கிறார் என்றும் நிச்சயமாக பிளாக் பஸ்டர் வெற்றி படமாக அமையும் என்றும் கூறியுள்ளார் விஜய்சேதுபதி.