இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
மலையாளத்தில் மம்முட்டி, பிரித்விராஜ் இருவரும் முதன்முதலாக இணைந்து நடித்த போக்கிரி ராஜா என்கிற படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குனர் வைசாக். அதைத் தொடர்ந்து மோகன்லாலை வைத்து இவர் இயக்கிய புலி முருகன் திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது. தொடர்ந்து மம்முட்டியை வைத்து மதுர ராஜா, அதன் பிறகு மீண்டும் மோகன்லாலை வைத்து அலோன் ஆகிய படங்களை இவர் இயக்கினாலும் இந்த இரண்டு படங்களும் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை.
இந்த நிலையில் மம்முட்டியை வைத்து மூன்றாவதாக இவர் இயக்கிய டர்போ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும் 50 கோடி வசூலை தாண்டி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இதைத்தொடர்ந்து மீண்டும் மோகன்லால் படத்தை தான் இயக்கப் போவதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் உறுதியாகவே கூறியுள்ளார் வைசாக். இந்த படத்திற்கான கதை ஏற்கனவே மோகன்லாலிடம் சொல்லப்பட்டு அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமே இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் முடிவு செய்யப்பட்டு விட்டதாம். மோகன்லால் தற்போது நடித்து வரும் படங்களின் படப்பிடிப்பை முடித்ததும் இந்த வருட இறுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறியுள்ளார் வைசாக்.