சென்னை குற்ற சம்பவ பின்னணியில் உருவான 'சென்னை பைல்ஸ்' | 'டூரிஸ்ட் பேமிலி' இடத்தை பிடிக்குமா 'ஹவுஸ் மேட்ஸ்' | பாடல் இல்லாத படம் 'சரண்டர்' | பிளாஷ்பேக்: மாதவி இரு வேடங்களில் நடித்த படம் | பிளாஷ்பேக்: 3 சகோதரிகள் இணைந்து நடித்த படம் | மோகன்லாலின் நவரச வீடியோவை வெளியிட்ட ‛மலைக்கோட்டை வாலிபன்' பட இயக்குனர் | படத்தை விமர்சிக்கும் முன் தங்கள் வீட்டு பெண்களிடம் ஒரு கேள்வியை கேளுங்கள் : ஜேஎஸ்கே இயக்குனர் ஆதங்கம் | மோகன்லாலின் நகை விளம்பரத்தை விழிப்புணர்வுக்கு பயன்படுத்திய கேரள போலீஸ் | நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஸ்வேதா மேனன் | மோகன்லால் பட ரீமேக்கில் நடிக்க விரும்பி இயக்குனரை நச்சரிக்கும் பஹத் பாசில் |
மலையாளத்தில் மம்முட்டி, பிரித்விராஜ் இருவரும் முதன்முதலாக இணைந்து நடித்த போக்கிரி ராஜா என்கிற படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குனர் வைசாக். அதைத் தொடர்ந்து மோகன்லாலை வைத்து இவர் இயக்கிய புலி முருகன் திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது. தொடர்ந்து மம்முட்டியை வைத்து மதுர ராஜா, அதன் பிறகு மீண்டும் மோகன்லாலை வைத்து அலோன் ஆகிய படங்களை இவர் இயக்கினாலும் இந்த இரண்டு படங்களும் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை.
இந்த நிலையில் மம்முட்டியை வைத்து மூன்றாவதாக இவர் இயக்கிய டர்போ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும் 50 கோடி வசூலை தாண்டி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இதைத்தொடர்ந்து மீண்டும் மோகன்லால் படத்தை தான் இயக்கப் போவதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் உறுதியாகவே கூறியுள்ளார் வைசாக். இந்த படத்திற்கான கதை ஏற்கனவே மோகன்லாலிடம் சொல்லப்பட்டு அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமே இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் முடிவு செய்யப்பட்டு விட்டதாம். மோகன்லால் தற்போது நடித்து வரும் படங்களின் படப்பிடிப்பை முடித்ததும் இந்த வருட இறுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறியுள்ளார் வைசாக்.