எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
பிளஸ்சி இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், பிருத்விராஜ், அமலாபால் மற்றும் பலர் நடிப்பில் மலையாளத்தில் வெளியான படம் 'ஆடு ஜீவிதம்'. இப்படம் 25 நாட்களில் 150 கோடி வசூலைக் கடந்துள்ளது. உலகம் முழுவதும் இதன் அலை பரவியுள்ளது. உங்களதுஅன்பான ஆதரவுக்கு நன்றி என படத்தின் கதாநாயகன் பிருத்விராஜ் தெரிவித்துள்ளார்.
படம் வெளியான 3 நாட்களில் 50 கோடி, 10 நாட்களுக்குள் 100 கோடி, 25 நாட்களுக்குள் 150 கோடியை வசூலித்துள்ளது. இந்த ஆண்டில் மலையாளத்தில் வெளியான படங்களில் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' படம் 200 கோடிக்கு அதிகமாக வசூலித்து முதலிடத்தில் உள்ளது. அதற்கடுத்து 150 கோடி வசூலித்து 'ஆடு ஜீவிதம்' இரண்டாவது இடத்தில் உள்ளது. 'பிரேமலு' படம் 130 கோடியைக் கடந்துள்ளது.
மலையாளத்தில் ஒரே ஆண்டில் இரண்டு படங்கள் 150 கோடி வசூலைக் கடப்பது இதுவே முதல் முறை. தமிழ் சினிமாவில் இந்த ஆண்டில் இதுவரை வெளியான படங்களில் ஒரு படம் 100 கோடி வசூலைக் கடக்கவில்லை.