ஆண்களுக்கும் 'பீரியட்ஸ்' ; சலசலப்பை கிளப்பிய ராஷ்மிகாவின் கருத்துக்கு பெருகும் ஆதரவு | ரூ.100 கோடி வசூலை குவித்த 'டியூட்' முதல் வரிசை கட்டும் இந்த வார ஓடிடி ரிலீஸ்....! | பிரதமர் மோடியின் அம்மா வேடத்தில் நடிக்கும் ரவீனா டாண்டன் | ஜேசன் சஞ்சய் எடுத்த சரியான முடிவு : விக்ராந்த் வெளியிட்ட தகவல் | உபேந்திரா-பிரியங்கா திரிவேதி மொபைல் போன்களை ஹேக் செய்த பீஹார் வாலிபர் கைது | லோகா படத்தின் புதிய பாகத்தில் மம்முட்டி : துல்கர் சல்மான் தகவல் | நாகார்ஜுனா மீதான அவதூறு கருத்துக்கு ஒரு வருடம் கழித்து வருத்தம் தெரிவித்த தெலுங்கானா அமைச்சர் | சின்மயியிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்த ஜானி மாஸ்டரின் மனைவி | 'ஜனநாயகன்' வாங்குவதில் வினியோகஸ்தர்கள் தயக்கம் ? | ராஜமவுலி, மகேஷ்பாபு பட தலைப்பு அறிவிப்பு விழா, பிரம்மாண்ட ஏற்பாடுகள் |

தமிழ் படங்களில் ஒரு கதாநாயகி இருந்தாலும் கூட கவர்ச்சிக்காகவும் வியாபாரத்திற்காகவும் இன்னொரு கதாநாயகியை வலிந்து திணித்துவரும் சூழலில், மலையாள திரையுலகை சேர்ந்த இயக்குனர் ஜித்து மாதவன் என்பவர் தான் இயக்கிய இரண்டு படங்களிலுமே கதாநாயகிகளே இல்லாமல் படத்தை உருவாக்கி இரண்டு படங்களையும் சூப்பர் ஹிட் ஆக்கியுள்ளார். கடந்த வருடம் ஹாரர் காமெடி படமாக வெளியான ரோமாஞ்சம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் அந்த படத்தில் முழுவதுமே இளைஞர்களை மையப்படுத்தி மட்டுமே ஹாரர் கலந்த காமெடி படமாக கொடுத்திருந்தார். இதில் கதாநாயகி இல்லை என்பதுடன் பெண் கதாபாத்திரங்கள் என்பதே வெகு சில நிமிடங்கள் வந்து செல்வதாக தான் இருந்தன.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பஹத் பாசில் நடிப்பில் வெளியான ஆவேசம் திரைப்படத்தையும் இவர்தான் இயக்கியிருந்தார். இது காமெடி கலந்த கேங்ஸ்டர் படமாக உருவாகியிருந்தது. இந்த படத்திலும் கதாநாயகி இல்லாமலேயே உருவாக்கியுள்ளார் ஜித்து மாதவன். கதாநாயகிகளுக்கு ஏன் முக்கியத்துவம் கொடுப்பதில்லை, இதையே டிரெண்டாக மாற்றி விட்டீர்களா என சமீபத்தில் இயக்குனர் ஜித்து மாதவனிடம் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஜித்து மாதவன், “அப்படியெல்லாம் இல்லை. கதையை மட்டுமே மனதில் வைத்து எழுதுகிறேன் அதில் கதாநாயகி கதாபாத்திரம் தேவைப்பட்டால் நிச்சயம் அதை மறுக்கப் போவதில்லை. ஆனால் எனது இரண்டு படங்களிலும் கதாநாயகிகளுக்கான இடம் என்பது தேவைப்படவில்லை என்பதுதான் உண்மை. வரும் படங்களில் கதைக்கு தேவைப்பட்டால் நிச்சயமாக கதாநாயகி கதாபாத்திரத்தை இணைத்துக் கொள்வேன்” என்று கூறியுள்ளார்.