என் கதையை காப்பி அடித்தவர்கள் உருப்படவில்லை: எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோபம் | நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு | ராம்சரணுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்த அமெரிக்க அதிபரின் மகன் | எதிர்மறை விமர்சனம் எதிரொலி : விலாயத் புத்தா படத்தில் 15 நிமிட காட்சிகள் நீக்கம் | ஜோசப் ரீமேக்கை பார்க்காமலேயே தர்மேந்திரா மறைந்து விட்டார் : மலையாள இயக்குனர் வருத்தம் | ஆஸ்கர் நாமினேஷனில் 'மகா அவதார் நரசிம்மா' | நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் |

தெலுங்கில் நாகசைதன்யா நடிப்பில் உருவாகி வரும் படம் 'தண்டேல்'. இதில் கதாநாயகியாக சாய்பல்லவி நடிக்க, 'கார்த்திகேயா 2' புகழ் இயக்குனர் சந்து மொண்டேட்டி இயக்க, அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு அரவிந்த் தயாரித்து வருகிறார். கடற்கரையோர கிராமத்து பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் நாகசைதன்யா மீனவர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மீன்பிடிப்பதற்காக கடலுக்கு செல்லும் நாகசைதன்யா எல்லை தாண்டி பாகிஸ்தானுக்குள் நுழைந்து விட அங்குள்ள ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்.
அங்கிருந்து எப்படி தப்பித்து மீண்டும் இந்தியாவுக்கு அவர் திரும்புகிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை என சொல்லப்படுகிறது. இதற்காக ஐதராபாத்தில் மிகப் பிரம்மாண்டமான அளவில் ஒரு பாகிஸ்தானிய சிறை செட் ஒன்று போடப்பட்டு வருகிறது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் இங்குதான் படமாக்கப்பட இருக்கின்றனவாம்.