அரங்கம் அதிர, விசிலு பறக்க... வெளியானது கூலி : ரசிகர்கள் கொண்டாட்டம் | ரிலீஸாகாத ‛மஞ்சும்மேல் பாய்ஸ்' பட நடிகரின் பட காட்சிகள் ஆன்லைனில் லீக் ; உதவி இயக்குனர் மீது புகார் | நிவின்பாலி மீதான மோசடி வழக்கு விசாரணையை நிறுத்தி வைத்த நீதிமன்றம் | இந்தாண்டு பல பாடங்களை கற்றுத் தந்தது : ஹன்சிகா | வேட்பு மனு நிராகரிப்பு சரிதான் ; பெண் தயாரிப்பாளரின் கோரிக்கையை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | 2வது திருமண சர்ச்சைக்கு இடையில் முதல் மனைவியுடன் விழாவில் பங்கேற்ற மாதம்பட்டி ரங்கராஜ் | கிஸ் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் | முருகனாக நடித்த ஸ்ரீதேவி; 13 வயதில் ஹீரோயின் ஆனவர்: இன்று ஸ்ரீதேவியின் 62வது பிறந்தநாள் | தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து விமர்சனத்தில் சிக்கிய ஜான்வி கபூர்! | சினிமாவில் 50... நம்ம சூப்பர் ஸ்டாரை நானும் பாராட்டுகிறேன் : கமல் |
பிரபல மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப், மோகன்லாலை வைத்து இயக்கிய திரிஷ்யம் படம் மூலமாக தென்னிந்தியாவையும் தாண்டி பாலிவுட் வரை பேசப்படும் இயக்குனராக உயர்ந்தார். தொடர்ந்து ரசிகர்களை இருக்கையில் கட்டிப்போடும் விதமான கதை அம்சம் கொண்ட படங்களை கொடுத்து வரும் ஜீத்து ஜோசப்பின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான நேர் திரைப்படமும் வெற்றியை பெற்றுள்ளது. இந்த நிலையில் ஜீத்து ஜோசப்பின் மகள் கேத்தியும் தந்தையின் வழியில் தானும் இயக்குனர் பாதையில் அடி எடுத்து வைத்து தனது முதல் படத்தையும் சத்தமில்லாமல் இயக்கி முடித்து விட்டார்.
'பார் ஆலிஸ்' என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படம் தியேட்டர்களுக்கு வராமல், ஓடிடி தளங்களுக்கும் செல்லாமல் இன்று குட்டி ஸ்டோரீஸ் என்கிற யுடியூப் சேனலில் நேரடியாகவே ரிலீஸ் ஆகிறது. இந்த தகவலை இயக்குனர் ஜீத்து ஜோசப் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த படத்தில் திரிஷயம் புகழ் எஸ்தர் அனில் கதாநாயகியாக நடித்துள்ளார். தந்தையைப் போல மகளும் ரசிகர்களை தன் பக்கம் இழுத்து விடுவார் என எதிர்பார்க்கலாம்.