புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் | சுவர் ஏறி குதித்து குழந்தையை காப்பாற்றிய திஷா பதானியின் தங்கை : குவியும் பாராட்டுக்கள் | 18வது திருமண நாளில் 'பேமிலி' புகைப்படத்தைப் பகிர்ந்த ஐஸ்வர்யா ராய் | மகேஷ்பாபுவுக்கு நேரில் ஆஜராக அமலாக்கத் துறை நோட்டீஸ் | கதை நாயகனாக நடிக்கும் 'காக்கா முட்டை' விக்னேஷ் | 'நிழற்குடையில்' கதை நாயகியாக நடிக்கும் தேவயானி | கால் பாதத்தை டீ ஸ்டாண்ட் ஆக மாற்றிய மம்முட்டி ; வைரலாகும் புகைப்படம் |
மலையாள திரையுலகின் முன்னணி இயக்குனர் ஜீத்து ஜோசப். மலையாளம் மட்டும் இன்றி தென்னிந்திய அளவில் ஏன் பாலிவுட்டிலும் கூட தனது திரிஷ்யம் படங்களின் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானவர். அதே சமயம் படத்தை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வேகமாக முடிக்கும் அளவிற்கு விறுவிறுப்பாக செயல்படும் ஜீத்து ஜோசப் பெரிய நடிகர், சிறிய நடிகர் என பாரபட்சம் பார்க்காமல் படங்களை இயக்கி வருகிறார்ர் அந்த வகையில் மோகன்லால் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகியுள்ள நேர் திரைப்படம் வரும் டிசம்பர் 21ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.
அதே சமயம் கடந்த நவம்பர் மாதம் நுணக்குழி என்கிற படத்தை இயக்கத் தொடங்கினார் ஜீத்து ஜோசப். படப்பிடிப்பு ஆரம்பித்த ஒரு மாதத்திலேயே இந்த படத்தை இயக்கி முடித்து விட்டார் ஜீத்து ஜோசப். இந்த படத்தின் கதாநாயகனாக மின்னல் முரளி பட இயக்குனரும் ஜெய ஜெய ஜெய ஜெய ஹே படத்தில் கதாநாயகனாக நடித்தவருமான பஷில் ஜோசப் நடித்துள்ளார். ஜீத்து ஜோசப்புடன் இணைந்து ஏற்கனவே டுவல்த் மேன், கூமன் ஆகிய படங்களுக்கு கதை எழுதிய கே.ஆர் கிருஷ்ணகுமார் இந்த படத்திலும் இணைந்து கதை எழுதி உள்ளார்.