'தக் லைப்' படத்தில் இடம் பெற்ற 'அமானுஷ்யன்' நாவலின் சில பகுதிகள் | 'அகண்டா 2' படத்தில் வில்லனாக ஆதி | காஞ்சனா 4 படத்தின் நிலவரம் என்ன? | மீண்டும் படம் இயக்கி நடிக்கும் பிரதீப் ரங்கநாதன்! | சின்னத்திரை நடிகை கண்மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது! | அதிர்ச்சி கொடுத்த 'தக்லைப்' படத்தின் ஐந்தாவது நாள் வசூல்! | தமன்னா நடிக்கும் 'விவான்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது! | வனிதா விஜயகுமாரின் 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' படத்தின் ரிலீஸ் தேதி போஸ்டரை வெளியிட்ட ரஜினிகாந்த்! | தக் லைப் : திட்டமிட்டதற்கு முன்பாகவே ஓடிடி ரிலீஸ்? | 7 வருடங்களுக்கு பிறகு தமிழில் நடிக்கும் விஜய் யேசுதாஸ் |
பிரபாஸ் நடிப்பில் அடுத்ததாக மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வரும் டிச-22ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் சலார். கே.ஜி.எப் இயக்குனர் பிரசாந்த் நீல் டைரக்சனில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் வில்லன் கலந்த நண்பனாக நடித்துள்ளார் பிரித்விராஜ். இந்த படத்தில் நடித்ததில் இருந்து இருவருக்கும் நெருங்கிய நட்பு உருவாகிவிட்டது. எந்த அளவிற்கு என்றால் இந்த உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் பிரபாஸுக்கு போன் செய்து ஒரு தேவை என்று சொன்னால் உடனடியாக அதை நிறைவேற்றித் தருவார் என்று கூறுகிறார் பிரித்திவிராஜ்.
மேலும் பிரபாஸ் பற்றி அவர் கூறும்போது, “பிரபாஸ் தன்னை சுற்றியுள்ள அந்த புகழ் வெளிச்சம் பற்றிய எண்ணமே இல்லாமல் இருக்கிறார். அந்த அளவிற்கு தன்னுடன் பழகுபவர்களை வசதியாக வைத்துக் கொள்கிறார். பிரபாஸ் பற்றி முழுமையாக ஒருவர் அறிந்து கொண்டால் நிச்சயம் அவரிடம் நட்பு பாராட்டாமல் இருக்க முடியாது” என்றும் கூறியுள்ளார்.
இது மட்டுமல்ல படப்பிடிப்பின் போது பிரித்விராஜூக்கு வழங்கப்பட்ட கேரவனை தன்னுடைய கேரவனை போன்றே மாற்றி தரும்படி அதன் வடிவமைப்பாளருக்கு உத்தரவிட்டு மாற்றி கொடுத்தாராம் பிரபாஸ்.