காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
தெலுங்கு திரை உலகின் பிரபல இயக்குனர்களின் ஒருவரும் தமிழகத்தை சேர்ந்தவருமான இயக்குனர் தேஜா, நடிகர் ராணாவை வைத்து நேனே ராஜா நேனே மந்திரி என்கிற ஹிட் படத்தை சில வருடங்களுக்கு முன்பு கொடுத்தார். இந்த நிலையில் தற்போது மீண்டும் ராணாவை வைத்து ராட்சச ராஜா என்கிற புதிய படத்தை இயக்குகிறார். இது குறித்த அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பு வெளியானது.
இந்த படம் 1930களில் சென்னையில் நடைபெறுவது போன்று உருவாக்கப்பட இருக்கிறது. குறிப்பாக நிஜ சம்பவத்தை மையப்படுத்தி இந்த படத்தை இயக்குகிறார் தேஜா. இதற்கு கேஜிஎப், சலார் போன்று பீரியட் படங்களுக்கு இசையமைத்த அனுபவம் வாய்ந்த இசையமைப்பாளர் ரவி பர்சூரை இந்த படத்திற்காக ஒப்பந்தம் செய்துள்ளார். சென்னையில் தான் பிறந்து வாழ்ந்த காலகட்டங்களில் கேள்விப்பட்ட நிஜமான கேங்ஸ்டர் கதைகளை தான் இந்த படத்தில் சொல்ல இருக்கிறாராம் இயக்குனர் தேஜா.