எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தொடர் வெற்றிகளை குவித்து இறுதி போட்டிக்குள் நுழைந்திருக்கிறது. ஆமதாபாத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை இந்தியா எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெறும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் தெலுங்கு நடிகை ரேகா போஜ் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “உலகக்கோப்பையை இந்தியா வென்றுவிட்டால் விசாகப்பட்டினம் கடற்கரையில் நான் நிர்வாணமாக ஓடுகிறேன். இந்திய கிரிக்கெட் அணி மீதான அன்பால் இதனை செய்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு “பார்க்க ஆர்வமாக இருக்கிறோம் ரொம்ப தூரம் ஓடுங்கள்” என்றும், “கிரிக்கெட் கோப்பைக்கும் உங்கள் நிர்வாணத்துக்கும் என்ன சம்பந்தம்” என்றும் கடும் விமர்சனங்களும் எழுந்துள்ளது. இது ஒரு விளம்பர ஸ்டண்ட் என்பதே பொதுவான கருத்தாக உள்ளது.
இதேபோன்றுதான் 2011ம் ஆண்டில் உலக கோப்பையை இந்திய அணி வென்றால் கிரிக்கெட் மைதானத்தில் நான் நிர்வாணமாக ஓடுவேன் என்று பூனம் பாண்டே அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.