இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தொடர் வெற்றிகளை குவித்து இறுதி போட்டிக்குள் நுழைந்திருக்கிறது. ஆமதாபாத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை இந்தியா எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெறும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் தெலுங்கு நடிகை ரேகா போஜ் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “உலகக்கோப்பையை இந்தியா வென்றுவிட்டால் விசாகப்பட்டினம் கடற்கரையில் நான் நிர்வாணமாக ஓடுகிறேன். இந்திய கிரிக்கெட் அணி மீதான அன்பால் இதனை செய்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு “பார்க்க ஆர்வமாக இருக்கிறோம் ரொம்ப தூரம் ஓடுங்கள்” என்றும், “கிரிக்கெட் கோப்பைக்கும் உங்கள் நிர்வாணத்துக்கும் என்ன சம்பந்தம்” என்றும் கடும் விமர்சனங்களும் எழுந்துள்ளது. இது ஒரு விளம்பர ஸ்டண்ட் என்பதே பொதுவான கருத்தாக உள்ளது.
இதேபோன்றுதான் 2011ம் ஆண்டில் உலக கோப்பையை இந்திய அணி வென்றால் கிரிக்கெட் மைதானத்தில் நான் நிர்வாணமாக ஓடுவேன் என்று பூனம் பாண்டே அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.