மம்முட்டி மோகன்லாலின் 'பேட்ரியாட்' டீசர் வெளியானது ; ரசிகர்களுக்கு ட்ரீட் உறுதி | திருமண நிச்சயதார்த்த தேதியை அறிவித்த அல்லு சிரிஷ் | ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கும் அஜித்குமார்! | 'மன சங்கர வர பிரசாத் கரு' படத்தின் நயன்தாரா பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராம்சரண் ஒரு உண்மையான ஜென்டில்மேன் என்கிறார் ஜான்வி கபூர்! | இட்லிகடை படத்தின் முதல் நாள் வசூல்? 100 கோடியை அள்ளுமா? | விஜயை கைது செய்யணுமா? நடிகர் பார்த்திபன் பதில் இதுதான் | டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்' | தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் |
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தொடர் வெற்றிகளை குவித்து இறுதி போட்டிக்குள் நுழைந்திருக்கிறது. ஆமதாபாத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை இந்தியா எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெறும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் தெலுங்கு நடிகை ரேகா போஜ் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “உலகக்கோப்பையை இந்தியா வென்றுவிட்டால் விசாகப்பட்டினம் கடற்கரையில் நான் நிர்வாணமாக ஓடுகிறேன். இந்திய கிரிக்கெட் அணி மீதான அன்பால் இதனை செய்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு “பார்க்க ஆர்வமாக இருக்கிறோம் ரொம்ப தூரம் ஓடுங்கள்” என்றும், “கிரிக்கெட் கோப்பைக்கும் உங்கள் நிர்வாணத்துக்கும் என்ன சம்பந்தம்” என்றும் கடும் விமர்சனங்களும் எழுந்துள்ளது. இது ஒரு விளம்பர ஸ்டண்ட் என்பதே பொதுவான கருத்தாக உள்ளது.
இதேபோன்றுதான் 2011ம் ஆண்டில் உலக கோப்பையை இந்திய அணி வென்றால் கிரிக்கெட் மைதானத்தில் நான் நிர்வாணமாக ஓடுவேன் என்று பூனம் பாண்டே அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.