நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் |
பாகுபலி படங்களின் வெற்றிக்கு பிறகு பான் இந்திய நடிகராக மாறிவிட்டார் பிரபாஸ். அதைத்தொடர்ந்து அவர் நடிக்கும் படங்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தாலும் இதற்கு முன்னதாக அவர் நடிப்பில் வெளியான ராதே ஷ்யாம் மற்றும் ஆதிபுருஷ் ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெற தவறின. தற்போது கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் டைரக்ஷனில் சலார் என்கிற படத்தில் நடித்து முடித்து விட்டார் பிரபாஸ். இந்த படம் டிசம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கல்கி, ராஜா டீலக்ஸ், ஸ்பிரிட் என அடுத்தடுத்த படங்கள் அவரது கைவசம் உள்ளன.
அதே சமயம் இந்த படங்களில் படப்பிடிப்புகளை எல்லாம் ஒத்திவைத்துவிட்டு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஐரோப்பா கிளம்பி சென்றார் பிரபாஸ். நீண்ட நாட்களாகவே முழங்கால் வலியால் அவதிப்பட்டு வந்த பிரபாஸுக்கு அங்கே முழங்கால் அறுவை சிகிச்சை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ஐரோப்பாவிலேயே தொடர்ந்து சில நாட்கள் ஓய்வெடுத்து விட்டு தற்போது ஹைதராபாத் திரும்பியுள்ளார் பிரபாஸ். விமான நிலையத்தில் இருந்து தனது முகத்திற்கு மாஸ்க் அணிந்தபடி தனி ஆளாக அவர் நடந்து செல்லும் வீடியோ ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.