ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
பாகுபலி படங்களின் வெற்றிக்கு பிறகு பான் இந்திய நடிகராக மாறிவிட்டார் பிரபாஸ். அதைத்தொடர்ந்து அவர் நடிக்கும் படங்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தாலும் இதற்கு முன்னதாக அவர் நடிப்பில் வெளியான ராதே ஷ்யாம் மற்றும் ஆதிபுருஷ் ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெற தவறின. தற்போது கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் டைரக்ஷனில் சலார் என்கிற படத்தில் நடித்து முடித்து விட்டார் பிரபாஸ். இந்த படம் டிசம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கல்கி, ராஜா டீலக்ஸ், ஸ்பிரிட் என அடுத்தடுத்த படங்கள் அவரது கைவசம் உள்ளன.
அதே சமயம் இந்த படங்களில் படப்பிடிப்புகளை எல்லாம் ஒத்திவைத்துவிட்டு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஐரோப்பா கிளம்பி சென்றார் பிரபாஸ். நீண்ட நாட்களாகவே முழங்கால் வலியால் அவதிப்பட்டு வந்த பிரபாஸுக்கு அங்கே முழங்கால் அறுவை சிகிச்சை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ஐரோப்பாவிலேயே தொடர்ந்து சில நாட்கள் ஓய்வெடுத்து விட்டு தற்போது ஹைதராபாத் திரும்பியுள்ளார் பிரபாஸ். விமான நிலையத்தில் இருந்து தனது முகத்திற்கு மாஸ்க் அணிந்தபடி தனி ஆளாக அவர் நடந்து செல்லும் வீடியோ ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.