நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியின் 10வது சீசன் கடந்த 8ம் தேதி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் சந்தோஷ் என்ற விவசாயி கலந்து கொண்டுள்ளார். இவர் தன் உடலில் கிலோ கணக்கில் நகை அணிந்து கொண்டு திரிவதன் மூலம் பிரபலமானவர். இந்த நிகழ்ச்சியில் அவர் புலி பல்லால் செய்யப்பட்ட டாலர் ஒன்றை அணிந்துள்ளார்.
அதை நிஜமான புலி பல் தான் என்று வெளிப்படையாகவும் நிகழ்ச்சியில் பேசி வந்தார். புலி பல் வாங்குவதோ, விற்பதோ, வைத்திருப்பதோ இந்திய வன பாதுகாப்பு சட்டப்படி குற்றமாகும். இதனால் இதுகுறித்து பொதுமக்கள் பலர் சமூக வலைத்தளங்களில் புகார் செய்யவே கர்நாடக மாநில வனத்துறை அதிகாரிகளும், பெங்களூரு ராஜேஸ்வரி நகர் காவல் நிலைய அதிகாரிகளுகம் பிக் பாஸ் வீட்டுக்கு சென்று சந்தோஷை கைது செய்தனர். பின்னர் அவர், பெங்களூரு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். பிக் பாஸ் வீட்டுக்குள் புகுந்து ஒருவரை போலீசார் கைது செய்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.