300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' | 3 ஹீரோக்கள் இணையும் படம் | பிளாஷ்பேக்: மூன்று திரைப்படங்களில் மட்டுமே நடித்து, முதன்மை குழந்தை நட்சத்திரம் என்ற உச்சம் தொட்ட “பேபி சரோஜா” | பிரதீப்பின் ‛எல்ஐகே' தள்ளிவைப்பு : 'டியூட்' தயாரிப்பாளர் மீது 'எல்ஐகே' தயாரிப்பாளர் குற்றச்சாட்டு |
நடிகர் விஜய் தேவரகொண்டாவின் தம்பி ஆனந்த் தேவரகொண்டா நடிப்பில் கடந்த ஜூலை மாதம் தெலுங்கில் பேபி என்கிற திரைப்படம் வெளியானது. கிட்டத்தட்ட 50 கோடிக்கு மேல் வசூலித்து வெற்றியையும் பெற்றது. அதுவரை ஒரு வெற்றிப்படம் கூட கொடுக்காத ஆனந்த் தேவரகொண்டாவிற்கு இந்த படம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அதுமட்டுமல்ல இந்த படத்தில் கதாநாயகியாக அறிமுகமான வைஷ்ணவி சைதன்யாவுக்கு முதல் படமே வெற்றி படமாக அமைந்தது. ரசிகர்களிடமும் வைஷ்ணவி வரவேற்பு பெற்றார்.
இந்த நிலையில் இந்த ஜோடி புதிய படம் ஒன்றிலும் இணைந்து நடித்து வருகின்றனர். இந்த படத்தையும் பேபி படத்தை தயாரித்த தயாரிப்பாளரே தயாரித்து வருகிறார். அறிமுக இயக்குனர் ரவி நம்பூரி என்பவர் இந்த படத்தை இயக்குகிறார். வரும் கோடை விடுமுறைக்கு இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தயாரிப்பாளர் ஸ்ரீனிவாச குமார் நாயுடு கூறியுள்ளார்.