ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
மலையாள சினிமாவின் சக்தி மிக்க ஆளுமையாக இருப்பவர் மம்முட்டி. 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அதிக தேசிய விருது வென்ற நடிகராகவும் இருக்கிறார். சமீபத்தில்கூட அவர் நடித்த 'கண்ணூர் ஸ்குவாட்' என்ற படம் 80 கோடியை தாண்டி வசூலித்து வருகிறது.
மம்முட்டியின் கலை சேவையை அங்கீகரிக்கும் வகையில் அவரது சிறப்பு தபால் தலை, ஆஸ்திரேலிய பார்லிமென்ட்டில் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஆஸ்திரேலியா நாட்டின் பிரதமர் ஆண்டனி அல்பானிஸ், பிரன்ட்ஸ் ஆப் இந்தியா அமைப்பின் தலைவர் ஆண்ட்ரூ சார்டன் எம்.பி. ஆகியோர் பங்கேற்று மம்முட்டி உருவம் பதித்த தபால் தலையை வெளியிட்டனர். அதனை இந்தியாவின் தலைமை கமிஷனர் மன்பிரீத் வோரா பெற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆஸ்திரேலிய பிரதமர் “மம்முட்டி இந்திய கலாசாரத்தின் வெளிப்பாடாக திகழ்கிறார். அவரது கலை சேவையை பாராட்டுகிறோம்'', என்று குறிப்பிட்டார். இந்த நிகழ்வை மம்முட்டி ரசிகர்களும், மலையாளிகளும் கொண்டாடி வருகிறார்கள்.