பெண் சாமியார் வேடத்தில் தமன்னா : ஒடேலா 2 டிரைலர் வெளியானது | ஜனநாயகன் படத்துடன் வெளியாகும் ஜூனியர் என்டிஆரின் 31வது படம் | அல்லு அர்ஜுனின் அபார வளர்ச்சி : சமந்தா வெளியிட்ட பதிவு | அஜித் பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் | நடிகர் 'லொள்ளு சபா' ஆண்டனி காலமானார் | டிடி நெக்ஸ்ட் லெவல் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு | மகிழ்ச்சியே வாழ்க்கைக்கு சிறந்த மருந்து : ரகுல் பிரீத் சிங் | ஏப்., 18ல் ரெட்ரோ இசை வெளியீடு | சர்வதேச சினிமா தொழில்நுட்ப கண்காட்சியில் கமல் | எங்களுக்குள்ளும் சண்டை வரும், பிரிவை யோசிக்க வைத்துள்ளது : ரம்பா |
நடிகர் ரஜினிகாந்த் திரையுலகத்திற்கு வெளியே மட்டுமல்ல திரையுலகத்திலேயே பல பிரபலங்களை தனது ரசிகர்களாக கொண்டவர். தமிழகத்தையும் தாண்டி இந்திய அளவில் பல முன்னணி நட்சத்திரங்களும் இவரை தங்களது ஆதர்ச ஹீரோவாக கருதுகிறார்கள். அவருடன் சந்திப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்து விடாதா என இப்போதும் பலர் ஏங்குகிறார்கள்.
அந்த வகையில் தனது 170 வது படத்தின் படப்பிடிப்பிற்காக திருவனந்தபுரத்தில் முகாமிட்டு படப்பிடிப்பில் கலந்து கொண்டார் ரஜினிகாந்த். இதையடுத்து மலையாள திரை உலகை சேர்ந்த பிரபலங்கள் அவரை நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றனர்.
அப்படி சமீபத்தில் கேரளாவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற 2018 என்கிற படத்தின் இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் படத்தின் தயாரிப்பாளர்களுடன் ரஜினிகாந்தை அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு நேரில் சென்று சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். இந்த படம் இந்த வருடத்திற்கான இந்திய சினிமாவில் இருந்து ஆஸ்கருக்காக நாமினேட் செய்யப்பட்டுள்ளதால் ஆஸ்கருக்கு சென்று விருது பெற்று வாருங்கள் என ரஜினிகாந்த் இயக்குனரை வாழ்த்தியுள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் மலையாள இளம் முன்னணி நடிகராக ஜெயசூர்யாவும் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து தனது நீண்ட நாள் விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து இப்படி ஒரு தருணம் வந்து விடாதா என்று தான் கனவு கண்டு கொண்டிருந்தேன். அது இன்று நிறைவேறியுள்ளது. ஒரு மிகப்பெரிய ஜாம்பவான், ஒரு சூப்பர் ஸ்டாரை சந்தித்தேன் என்று சொல்வதை விட இதுவரை நான் பார்த்திராத ஒரு மிகவும் அழகான மனிதனை சந்தித்தேன் என்று சொல்வது தான் சரியாக இருக்கும்" என கூறியுள்ளார். மேலும் இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்து உதவியதற்காக காந்தாரா புகழ் நடிகரும் இயக்குனருமாக ரிஷப் ஷெட்டிக்கு தன்னுடைய நன்றியையும் தெரிவித்துள்ளார் நடிகர் ஜெயசூர்யா.