டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

உலக அளவில் நடக்கும் திரைப்பட விழாக்களில் ஒன்று நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் நடக்கும் 'செப்டிமியஸ்' விருது. 2023ம் ஆண்டின் விருது விழா கடந்த 25 மற்றும் 26ம் தேதிகளில் நடந்தது. இதனை நெதர்லாந்து நாட்டின் கலாச்சாரத்துறை அமைச்சர் ஆல்டர்மேன் டூரியா துவக்கி வைத்தார்.
ஆசியா, ஆப்ரிக்கா, ஓசியானியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளை சேர்ந்த படங்களுக்கும், கலைஞர்களுக்கும் விருது வழங்கப்பட்டது. அந்த வரிசையில் ஆசியாவின் சிறந்த நடிகருக்கான விருது மலையாள நடிகர் டொவினோ தாமசுக்கு வழங்கப்பட்டது. இதனை அவர் நெதர்லாந்து நாட்டிற்கு நேரில் சென்று பெற்றுக் கொண்டார்.
முன்னனி மலையாள நடிகரான டொவினோ தாமஸ் தமிழில் 'மாரி 2' படத்தில் வில்லனாக நடித்தார். இவர் நடித்த 'மின்னல் முரளி' படமும், '2018' படமும் பெரிய வெற்றி பெற்றது. அதிலும் குறிப்பாக 2018 படம் 200 கோடி வசூலித்து மலையாள சினிமாவில் சரித்திரம் படைத்தது. இந்த படம்தான் தற்போது ஆஸ்கர் விருதுக்கு இந்திய அரசின் சார்பில் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தில் நடித்ததாற்காகத்தான் ஆசியாவின் சிறந்த நடிகர் விருது டொவினோ தாமசுக்கு வழங்கப்பட்டுள்ளது.




