ஒன்றரை லட்ச ரூபாய் 'டி ஷர்ட்' அணிந்த மகேஷ்பாபு | முன்னணி இயக்குனர்களின் தோல்வி : வருத்தத்தில் தமிழ் சினிமா | பிளாஷ்பேக்: 'சிறை'யின் குறைகள் | பிளாஷ்பேக் : ஆணாக அறிமுகமான விஜய நிர்மலா | 'குபேரா' படத்திற்கு அழுத்தம் கொடுத்த ஓடிடி நிறுவனம் | ராஜமவுலி, மகேஷ்பாபு பட வாய்ப்பைத் தவிர்த்த விக்ரம்? | சாந்தனு ஜோடியாக அஞ்சலி நாயர் | 'திருக்குறள்' படம் உருவானது எப்படி?: இயக்குனர் விளக்கம் | அஜ்மல் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு | இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் |
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மோகன்லால் வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனையின் போது அவர் வீட்டில் இருந்த இரண்டு ஜோடி யானைத் தந்தங்கள் கைப்பற்றப்பட்டன. அனுமதியின்றி யானைத் தந்தங்கள் வைத்திருப்பது குற்றம் என மோகன்லால் மீது வழக்கு பதியப்பட்டது. அதன்பிறகு மாநில அரசு மோகன்லால் மீதான இந்த வழக்கை கைவிடும்படி கேட்டுக் கொண்டதன் பேரில் கைவிடப்பட்டாலும் எர்ணாகுளத்தைச் சேர்ந்த பவுலோஸ் என்கிற நபர் மீண்டும் இதன் பெயரில் வழக்கு தொடர்ந்ததால் தற்போது பெரும்பாவூர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்து வருகிறது.
கடந்த சில மாதங்களாக சத்தமின்றி அமுங்கி இருந்த இந்த வழக்கு மீண்டும் சூடு பிடித்துள்ளது. இதனை தொடர்ந்து வரும் நவம்பரில் மோகன்லால் இந்த வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் பெரும்பாவூர் நீதிமன்றம் உத்தரவிட்டது இந்த நிலையில் தற்போது எதிர்பாராத திருப்பமாக கேரள உயர்நீதிமன்றம் இந்த யானைத் தந்த வழக்கு குறித்த விசாரணையை ஆறு மாதத்திற்கு நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பெரும்பாவூர் நீதிமன்றமும் உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதாக அறிவித்துள்ளது.