ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
மலையாள சினிமாவின் முன்னணி இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் படம் மலைக்கோட்டை வாலிபன். சோனாலி குல்கர்னி, ஹரீஷ் பெரடி, மணிகண்டன் ஆச்சாரி, ராஜீவ் பிள்ளை உள்பட பலர் நடிக்கிறார்கள். மது நீலகண்டன் ஒளிப்பதிவு செய்கிறார், பிரசாந்த் பிள்ளை இசை அமைக்கிறார்.
படத்தின் பணி இறுதிகட்டத்தை அடைந்துள்ளது. இந்த நிலையில் படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 25ம் தேதியன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாவதாக மோகன்லால் அறிவித்துள்ளார். இக்குனர் லியோ ஜோசின் பிறந்த நாளான நேற்று இந்த அறிவிப்பை மோகன்லால் வெளியிட்டார்.
'மலைக்கோட்டை வாலிபன்' படத்தின் படப்பிடிப்பு பணிகள் புதுச்சேரி, சென்னை, ராஜஸ்தான் ஆகிய இடங்களில் 130 நாட்களில் நடைப்பெற்று நிறைவடைந்தது. மேக்ஸ் லேப், செஞ்சுரி பிலிம்ஸ், சரிகம இந்தியா லிமிடெட் மற்றும் ஜான் அண்ட் மேரி கிரியேட்டிவ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கின்றன.