புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
மலையாளத்தில் கடந்தாண்டு வெளியான 'ஜெய ஜெய ஜெய ஜெய ஹே' மற்றும் ரோமாஞ்சம் என சிறிய பட்ஜெட் படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்று 50 கோடி வசூல் கிளப்பில் இணைந்து ஆச்சரியப்படுத்தின. அந்த வகையில் இந்த ஆண்டில் கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் கடந்த நிலையில் சமீபத்தில் வெளியான ஆர்டிஎக்ஸ் திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பு பெற்று மிகப்பெரிய அளவில் வசூலித்தும் வருகிறது. இந்தப் படமும் விரைவில் 50 கோடி வசூல் கிளப்பில் இடம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அறிமுக இயக்குனரான நகாஷ் ஹிதாயத் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில் ஆறு சண்டை காட்சிகள் இடம் பெற்றுள்ளன. கதையுடன் சேர்ந்த மார்ஷியல் ஆர்ட்ஸ் கலையை பின்னணியாக கொண்ட இந்த சண்டைக்காட்சிகளுக்கு தான் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழ் திரையுலகை சேர்ந்த சண்டை பயிற்சி இயக்குனர்களான அன்பறிவு இருவரும் இந்த படத்தின் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளனர். இளம் நடிகர்களான ஷேன் நிகம், ஆண்டனி வர்கீஸ் மற்றும் நீரஜ் மாதவ் மூவருக்கும் இந்தப்படத்தின் வெற்றி மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது.
இந்த வெற்றி பற்றி இயக்குனர் நகாஷ் ஹிதாயத் கூறும்போது, “இந்த படம் குடும்ப ரசிகர்களுக்கு பிடித்த ஆக்சன் படமாக இருக்க வேண்டும் என்று திட்டமிட்டு உருவாக்கினோம். அதற்காகவே “எங்கள் குடும்பத்தை தொட்டால் உங்களை சும்மா விடமாட்டோம்” என்கிற ஒன்லைனை மையமாக வைத்து இந்த படத்தின் கதையை உருவாக்கி இருந்தோம். சண்டைக்காட்சிகளும் வழிந்து திணிக்கப்படவில்லை என்றாலும் இயல்பாகவே ஆறு சண்டை காட்சிகள் இதில் அமைந்து விட்டன. இந்த படம் வெற்றி பெறும் என்கிற நம்பிக்கை இருந்தது. அதே சமயம் இந்த அளவிற்கு ரசிகர்களின் வரவேற்புடன் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை” என்று கூறியுள்ளார்.