டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

சோசியல் மீடியாவில் குறிப்பிட்ட சிலர் வதந்திகளை உண்மைகள் போல பரப்புவதில் கைதேர்ந்தவர்களாக இருக்கின்றனர். சினிமா பிரபலங்கள் உடல் நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், அவர்கள் உடல்நிலை பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருவதற்கு முன்னதாக இவர்களே அவர்கள் இறந்து விட்டதாக தகவலை பரப்புவார்கள். உயிருடன் திடகாத்திரமாக இருக்கும் நபர்களுக்கு கூட அடிக்கடி இது நடக்கும். அந்த வகையில் பிரபல மலையாள டிவி நடிகரான டி.எஸ் ராஜு என்பவர் இறந்து விட்டதாக சமீபத்தில் சோசியல் மீடியாவில் வதந்தி ஒன்று உண்மை செய்தி போல பரவியது.
மலையாளத்தில் முன்னணி காமெடி நடிகராக இருக்கும் அஜு வர்கீஸ் இதை உண்மை என்று நம்பி தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டு தனது இரங்கலை தெரிவித்து இருந்தார். பின்னர் தான் இது வதந்தி என தெரிய வந்ததும் உடனே அதை டெலீட் செய்துவிட்ட அஜு வர்கீஸ் சம்பந்தப்பட்ட நடிகரிடம் சோசியல் மீடியா மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் தனது வருத்தங்களை தெரிவித்து மன்னிப்பு கேட்டுக் கொண்டார். குறிப்பாக மீடியாக்கள் முன்பாகவே நடிகர் டி.எஸ் ராஜுவுக்கு போன் செய்த அஜு வர்கீஸ் அவரது காலில் விழுந்து மன்னிப்பு கேட்பதாக கூறினார்.
சோசியல் மீடியாவில் வெளியான அவரது இறப்பு செய்தி அந்த அளவுக்கு நம்பகத்தன்மை வாய்ந்தது போன்று இருந்ததால் அதை உண்மை என நம்பிவிட்டேன் என்றும் கூறியுள்ளார் அஜு வர்கீஸ். இந்த வதந்தி குறித்து நடிகர் டி.எஸ் ராஜு கூறும்போது நான் தற்போது ஆரோக்கியமாக இருக்கிறேன்.. நான் சாகவேண்டும் என விரும்பும் யாரோ ஒரு நபர் முன்கூட்டியே எனக்கு ஒரு அறிவிப்பை கொடுத்துள்ளதாக இதை நினைக்கிறேன்” என்று நகைச்சுவையுடன் கூறியுள்ளார்.




