புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
பிரபல தெலுங்கு சேனலில் ஒளிபரப்பாகி வரும் 'தீ' என்கிற டான்ஸ் ஷோ மூலம் நடன இயக்குநராக பிரபலமானவர் சைதன்யா. இவர் நடன நிகழ்ச்சிகள் மட்டுமின்றி, திரைப்படங்களில் நடன இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார். தனிப்பட்ட நடன ஆல்பங்களையும் வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில் அவர் கிளப் ஒன்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பெரும் கடன் பிரச்சினையால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தற்கொலைக்கு முன்பு அவர் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில் "எனது பெற்றோர், சகோதரி, சக டான்ஸ் மாஸ்டர்கள் மற்றும் நடனக் கலைஞர்களை மன்னிக்க வேண்டும். பணப்பிரச்சினையை சமாளிக்க முடியாமல் இப்படி ஒரு முடிவை எடுக்கிறேன். இதனை சமாளிக்க எவ்வளவோ முயன்றும் பலனில்லை" என்று கூறியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள். சைதன்யாவின் மரணத்திற்கு, தெலுங்கு திரையுலகை சேர்ந்த, பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளம் மூலம் தங்களின் இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள்.