அம்மாவாக நடிப்பது பெருமை... வயது தடையில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | பிளாஷ்பேக்: கனவில் அறிமுகமாகி, காலம் இணைத்து வைத்த காதல் மனங்களின் “மனோன்மணி” | நயன்தாரா ஆவணப்படத்தில் 'சந்திரமுகி' காட்சிகள்: நஷ்டஈடு கோரி மேலும் ஒரு வழக்கு | கூலி படத்திற்காக இரண்டு ஆண்டுகளாக கடின உழைப்பை போட்ட லோகேஷ் கனகராஜ் | ‛டிமான்டி காலனி 3' படப்பிடிப்பை தொடங்கிய அஜய் ஞானமுத்து | முதல் படத்திலேயே அதிர்ச்சி தோல்வியை சந்தித்த சூர்யா சேதுபதி | டாக்சிக் படத்தில் இணைந்த அனிருத் | ‛இவன் தந்திரன் 2'ம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது | பூரி ஜெகன்னாத் படத்தில் விஜய் சேதுபதி; ஹைதராபாத்தில் துவங்கியது படப்பிடிப்பு | தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ராஜேஷின் கதாநாயகனாக 2வது பட அறிவிப்பு |
வளர்ந்து வந்த இளம் கன்னட நடிகர் சம்பத் ஜெயராம். 'அக்னிசாக்ஷி' என்ற கன்னட தொடரின் மூலம் பிரபலமான இவர் திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கி இருந்தார். கடந்த ஆண்டுதான் திருமணம் செய்தார். ஜெயராம் நடித்த பல படங்கள் வெளிவராமல் தேங்கி கிடந்துள்ளது. சீரியல் வாய்ப்புகளும் பெரிதாக வரவில்லை. இதன் காரணமாக கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஜெயராம் பெங்களூர் நெலமங்கலம் பகுதியில் உள்ள தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 32 வயதான சம்பத் ஜெயராமின் மரணம் கன்னட சின்னத்திரை, பெரியதிரை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சம்பத் ஜெயராமின் மறைவு குறித்து நடிகர் ராஜேஷ் துருவா தனது டுவிட்டரில் “உனது பிரிவை தாங்கும் சக்தி இல்லை. நிறைய படங்கள் தயாராகி நிலுவையில் உள்ளன. உனது கனவை நிறைவேற்ற இன்னும் காலம் இருக்கிறது. திரும்பி வா'' என்று குறிப்பிட்டு உள்ளார்.