ரெட்ரோ டிரைலர் : விதவிதமாய் 'குக்' செய்துள்ள கார்த்திக் சுப்பராஜ் | அஜித் பிறந்த நாளில் 'வீரம்' மறு வெளியீடு | உடல்நலக்குறைவு எதனால் ஏற்பட்டது : ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட தகவல் | 'மணி ஹெய்ஸ்ட்' பாதிப்பில் உருவானது கேங்கர்ஸ்: சுந்தர்.சி | பிளாஷ்பேக்: 100 படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்த சுலக்ஷனா | பிளாஷ்பேக்: குருவாயூரப்பனை எழுப்பும் லீலாவின் குரல் | அஜித்திற்கு எப்போதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன் : ஆதிக் ரவிச்சந்திரன் | வாழ்க்கை அழகானது... வரும் வாய்ப்பை விட்டுவிடாதீர்கள் : ரெட்ரோ பட விழாவில் சூர்யா பேச்சு | குஷ்புவின் எக்ஸ் தளத்தை முடக்கிய ஹேக்கர்கள் | சம்மரில் சூடு பிடிக்கும் தமிழ் சினிமா |
மலையாள நடிகர் பஹத் பாசில் இரண்டு வருடங்களில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் புஷ்பா, விக்ரம் என மிகப்பெரிய வெற்றி படங்களில் நடித்து கிட்டத்தட்ட பான் இந்தியா நடிகர் என்கிற அந்தஸ்திற்கு உயர்ந்துள்ளார். கன்னடத்தில் இருந்தும் அவரைத்தேடி பட வாய்ப்புகள் வருகின்றன. இந்த நிலையில் தற்போது வருமானவரித்துறையினர் அவர்களது சில சந்தேகங்களுக்கு பஹத் பாசிலை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கூறி சம்மர் அனுப்பி உள்ளனர்.
குறிப்பாக பஹத் பாசில் ஒடிடியில் வெளியான படங்களில் நடிப்பதற்காக வாங்கிய அட்வான்ஸ் தொகை மற்றும் அவர் தயாரிப்பாளராக உள்ள தயாரிப்பு நிறுவனத்தின் கணக்கு வழக்குகள் ஆகியவற்றில் ஏற்பட்ட சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்பதற்காகவே அவருக்கு இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி இதேபோன்று நேரிலேயே ஆஜரான மோகன்லாலிடமும் வருமான வரித்துறையினர் அவரது கணக்கு வழக்குகள் குறித்த சந்தேகங்களை கேட்டு அந்த விளக்கங்களை பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.