டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் | பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் | ‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி |
மலையாள திரை உலகின் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் மம்முட்டி நடிப்பில் சில நாட்களுக்கு முன்பு வெளியான நண்பகல் நேரத்து மயக்கம் என்கிற படம் அவர் இப்படி எல்லாம் கூட எளிமையான, வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பாரா என்கிற ஆச்சர்யத்தை மீண்டும் ஒருமுறை ஏற்படுத்தியது. அந்த அளவிற்கு ஒரு எளிய கிராமத்து மனிதனாக அந்த படத்தில் நடித்திருந்தார் மம்முட்டி. இதைத்தொடர்ந்து அடுத்ததாக அவர் நடிக்க இருக்கும் புதிய படத்தில் இதற்கு நேர் மாறாக துப்பறியும் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் மம்முட்டி. இந்த படத்திற்கு கண்ணூர் ஸ்குவாட் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
மலையாள சினிமாவின் பிரபல ஒளிப்பதிவாளர் ஆன ரோபி வர்கீஸ் ராஜ் என்பவர் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். வழக்கம் போல இந்த படத்தின் கதையும் மம்முட்டிக்கு ரொம்பவே பிடித்து போனதால் தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான மம்முட்டி கம்பெனி சார்பில் தானே இந்த படத்தை தயாரிக்கிறார். இன்னும் இதன் டைட்டில் குறித்த அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியாகாத நிலையில் தானே படத்தின் தயாரிப்பாளர் என்பதால் சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த படத்தின் டைட்டில் பற்றி வெளிப்படையாக கூறியுள்ளார் மம்முட்டி.