துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
முன்னணி பத்திரிகை நிறுவனம் ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்தவர்களுக்கு 'ட்ரூ லெஜண்ட்க் விருது வழங்கி வருகிறது. இந்த ஆண்டு கலைத்துறையில் இருந்து கொண்டே சமூக பணியாற்றி வரும் ராம் சரணுக்கு 'பியூச்சர் ஆப் யங் இந்தியா' விருது வழங்கி கவுரவித்தது.
இந்த விழாவில் ராம்சரண் பேசியதாவது: 1997ம் ஆண்டு எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் ரத்தம் கிடைக்காமல் இறந்துவிட்டார். என் அப்பா (சிரஞ்சீவி) ஏற்கனவே மெகா ஸ்டார். கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் எங்கள் குடும்பத்தில் ஒருவர் ரத்தம் கிடைக்காமல் இறந்தது எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதற்கு அடுத்த வருடமே என் அப்பா ரத்த வங்கியைத் தொடங்கினார்.
இதேபோல், கோவிட் நேரத்தில் திரைப்பட தொழிலாளர்கள் 17 ஆயிரம் பேருக்கு உதவி செய்தோம். அது ஒரு சிறிய உதவி. அவர்களுக்கு அது மிகவும் தேவைப்பட்டது. நான் செய்து வரும் எல்லா பணிகளும் என் தந்தை தொடங்கி வைத்தது. வருங்காலங்களில் நானும் சில பணிகளை தொடங்க முடிவு செய்திருக்கிறேன். இந்த விருதை எனது பெற்றோர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.
இவ்வாறு ராம் சரண் பேசினார்.