பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை |

நடிகர் மோகன்லால் மலையாள திரையுலகில் மட்டுமே தனது முழு கவனத்தையும் செலுத்தி நடித்து வருவதால் வருடத்திற்கு குறைந்தது நான்கு படங்களாவது கொடுத்துவிடுகிறார். அதேசமயம் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நல்ல கதாபாத்திரங்கள் வந்தால் அதையும் தவிர்க்காமல் ஏற்றுக்கொள்கிறார். அந்தவகையில் 2004ல் வெளியான லவ் என்கிற கன்னட படத்தில் முதன்முதலாக நடித்த மோகன்லால், கடந்த 2015ல் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருடன் இணைந்து மைத்ரி என்கிற படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த படம் மிகப்பெரிய வெற்றியும் பெற்றது.
இந்த நிலையில் ஏழு வருடங்களுக்கு பிறகு மீண்டும் கன்னட படம் ஒன்றில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை இயக்குனர் பிரேம் என்பவர் இயக்குகிறார். இந்த படத்தில் மறைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் தம்பியான துருவ் சார்ஜா கதாநாயகனாக நடிக்க மோகன்லால் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறாராம். இந்த படத்தின் டைட்டில் வெளியீட்டு நிகழ்வு வரும் அக்-20ஆம் தேதி பெங்களூரில் உள்ள ஒரு மாலில் நடைபெற உள்ளது.
ஆனால் மோகன்லால் இதில் நடிக்கிறாரா என்பது பற்றி நேரடியாக கூறாமல், அவருடன் இணைந்து தான் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ள இயக்குனர் பிரேம். 'என்ன விதமான உணர்வுகளில் இருக்கிறேன் என்பதை விவரிக்க எனக்கு வார்த்தைகளே இல்லை. இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மோகன்லால் சாரின் ஆதரவு எங்களைப் போன்றவர்களை இன்னும் உயரத்திற்கு கொண்டு செல்லும்” என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
அதேசமயம் மோகன்லால் இந்தப்படத்தில் நடிக்கவில்லை. இந்தப்படத்தின் டைட்டிலை மட்டுமே அவர் அறிமுகப்படுத்துகிறார் என்றும் சொல்லப்பட்டு வருகிறது..




