மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
கடந்த வருடம் மலையாளத்தில் சூப்பர் மேன் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் மின்னல் முரளி. டொவினோ தாமஸ் மற்றும் தமிழ் நடிகர் குருசோமசுந்தரம் இருவருமே இந்த படத்தில் சூப்பர்மேன் பவர்கொண்ட ஹீரோ மற்றும் வில்லன் என்கிற கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற இந்த படத்திற்கு ஜஸ்டின் மேத்யூ என்பவர் இன்னொரு கதாசிரியருடன் இணைந்து கதை எழுதியிருந்தார். இந்த நிலையில் அடுத்ததாக அவர் எழுதிய கதையை பிரபல பாலிவுட் இயக்குநரும். தயாரிப்பாளருமான அஸ்வினி ஐயர் திவாரி தயாரிக்கிறார்..
2016-ல் அமலாபால் நடிப்பில் தமிழில் வெளியான அம்மா கணக்கு படத்தை இயக்கியவர் தான் அஸ்வினி ஐயர் திவாரி. இந்த படத்தின் மூலம் முதன்முதலாக மலையாளத்தில் அடியெடுத்து வைக்கும் இவர், தனது அம்மா தான் வளர்ந்து வந்த காலகட்டத்திலே மலையாள படங்களை பார்க்க தன்னை உற்சாகப்படுத்தினார் என்றும் அதைத் தொடர்ந்து தான் தற்போது மலையாளத்தில் படம் தயாரிக்க முடிவு செய்ததாகவும் கூறியுள்ளார்.