புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
மலையாளத்தில் நேரம், பிரேமம் என இரண்டு படங்களை மட்டுமே இயக்கியவர் அல்போன்ஸ் புத்ரன். இந்த இரண்டு படங்களின் மூலம் கேரளாவில் மட்டுமல்லாது, தமிழகத்திலும் மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை சம்பாதித்துள்ளார். அதேசமயம் பிரேமம் படம் வெளியாகி கிட்டத்தட்ட ஏழு வருடங்களாக வேறு எந்த படமும் இயக்காமல் இருந்தவர், தற்போது பிரித்விராஜ், நயன்தாரா இணைந்து நடித்துள்ள கோல்டு என்கிற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஓணம் பண்டிகை கொண்டாட்டமாக இந்த படம் வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் பிரித்விராஜின் பலவிதமான முக பாவங்களை வைத்து புதிதாக ஒரு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதுமட்டுமல்ல சோசியல் மீடியாவில் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் ரசிகர்களுடன் உரையாடும்போது இந்த படத்தின் டிரைலர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு படம் ரிலீசுக்கு முன்பு ட்ரெய்லர் வெளியாவதற்கு வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார். அதே சமயம் இந்த படத்தில் இருந்து ஒரு பாடல் மட்டும் படம் ரிலீசுக்கு முன்பாக வெளியிடப்படும் என்று கூறி ரசிகர்களை சமாதானப்படுத்தியும் உள்ளார் அல்போன்ஸ் புத்ரன்.. அந்த பாடல் நேரம் படத்தில் கிளைமாக்ஸில் வெளியாகி ஹிட்டான பிஸ்தா பாடல் பாணியில் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.