ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
மலையாளத்தில் அங்கமாலி டைரீஸ், ஜல்லிக்கட்டு என வித்தியாசமான கதை அம்சத்துடன், வித்தியாசமான கதைக்களத்தில் தனது படங்களை இயக்கி வருபவர் இயக்குனர் லிஜோ ஜோஸ் பள்ளிசேரி. பெரும்பாலும் புதுமுகங்களை மட்டுமே வைத்து படம் இயக்கி வந்த இவர், தற்போது நடிகர் மம்முட்டியை கதாநாயகனாக வைத்து நண்பகல் நேரத்து மயக்கம் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இவர் சொன்ன கதை பிடித்துப்போய் உடனடியாக நடிக்க சம்மதம் தெரிவித்த மம்முட்டி, இந்த படத்தை தானே தயாரிக்கவும் செய்கிறார். இந்த படம் தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது.
இந்த படத்தில் மம்முட்டி தமிழகத்தைச் சேர்ந்த ஒரு சாதாரண கிராமத்து மனிதனாக நடித்துள்ளார். அவர் கிராமத்து திண்ணையில் தலைக்கு கைகளை வைத்து படுத்து உறங்குவது போல இதற்கு முன்பு வெளியான புகைப்படம் ஒன்று ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது.. இந்தநிலையில் தற்போது இன்னும் மாட்டுச்சாணம் மூலம் வரட்டி தட்டி அவற்றை சுவற்றில் காய வைக்கும் தமிழக கிராமத்து தெரு ஒன்றில், லுங்கியை மடித்துக்கொண்டு பழைய டிவிஎஸ் எக்ஸெல் வண்டியை மம்முட்டி ஓட்டி வருவது போன்று ஒரு போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஒரு பக்கம் அதிரடி கேங்ஸ்டர், அதிரடி போலீஸ் அதிகாரி என நடித்து வரும் மம்முட்டியின் இந்த சராசரி மனிதன் அவதாரம் நம்மை ஆச்சரியப்படுத்தவே செய்கிறது.