புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் | சுவர் ஏறி குதித்து குழந்தையை காப்பாற்றிய திஷா பதானியின் தங்கை : குவியும் பாராட்டுக்கள் | 18வது திருமண நாளில் 'பேமிலி' புகைப்படத்தைப் பகிர்ந்த ஐஸ்வர்யா ராய் | மகேஷ்பாபுவுக்கு நேரில் ஆஜராக அமலாக்கத் துறை நோட்டீஸ் | கதை நாயகனாக நடிக்கும் 'காக்கா முட்டை' விக்னேஷ் | 'நிழற்குடையில்' கதை நாயகியாக நடிக்கும் தேவயானி | கால் பாதத்தை டீ ஸ்டாண்ட் ஆக மாற்றிய மம்முட்டி ; வைரலாகும் புகைப்படம் |
தெலுங்கில் உப்பெனா என்ற படத்தில் நாயகியாக அறிமுகமானவர் கிர்த்தி ஷெட்டி. இந்த படத்தில் விஜய் சேதுபதி அவரது தந்தையாக நடித்திருந்தார். அந்த படம் சூப்பர் ஹிட் அடித்ததால் அதன்பிறகு அவருக்கு நான்கு படங்கள் புக்காகின. அதில் இரண்டு படங்கள் ஹிட் அடித்த நிலையில், அதையடுத்து லிங்குசாமி இயக்கத்தில் ராம்பொத்தனேனிக்கு ஜோடியாக நடித்த தி வாரியர் படம் வரவேற்பை பெறவில்லை.
அந்த படத்தை தொடர்ந்து தற்போது தெலுங்கில் நிதினுக்கு ஜோடியாக கிர்த்தி ஷெட்டி நடித்து கடந்த 12ம் தேதி வெளியாகியுள்ள மச்சேர்ல நியோ ஜெகவர்கம் என்ற படமும் தோல்வி அடைந்து விட்டது. இப்படி இரண்டு படங்கள் அடுத்தடுத்து கிர்த்தி ஷெட்டிக்கு தோல்வியாக அமைந்து விட்ட நிலையில் அடுத்தபடியாக தெலுங்கில் நடித்துள்ள ஆ அம்மை குறிஞ்சி மீக்கு செப்பளி என்ற படத்தை பெரிய அளவில் தான் எதிர்பார்த்திருப்பதாக தெரிவித்திருக்கிறார் கிர்த்தி ஷெட்டி. இந்த படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. அதோடு, தற்போது பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வணங்கான், நாகசைதன்யா நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கும் படத்திலும் தற்போது கிருத்தி ஷெட்டி நடித்து வருகிறார்.