ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தெலுங்கில் உப்பெனா என்ற படத்தில் நாயகியாக அறிமுகமானவர் கிர்த்தி ஷெட்டி. இந்த படத்தில் விஜய் சேதுபதி அவரது தந்தையாக நடித்திருந்தார். அந்த படம் சூப்பர் ஹிட் அடித்ததால் அதன்பிறகு அவருக்கு நான்கு படங்கள் புக்காகின. அதில் இரண்டு படங்கள் ஹிட் அடித்த நிலையில், அதையடுத்து லிங்குசாமி இயக்கத்தில் ராம்பொத்தனேனிக்கு ஜோடியாக நடித்த தி வாரியர் படம் வரவேற்பை பெறவில்லை.
அந்த படத்தை தொடர்ந்து தற்போது தெலுங்கில் நிதினுக்கு ஜோடியாக கிர்த்தி ஷெட்டி நடித்து கடந்த 12ம் தேதி வெளியாகியுள்ள மச்சேர்ல நியோ ஜெகவர்கம் என்ற படமும் தோல்வி அடைந்து விட்டது. இப்படி இரண்டு படங்கள் அடுத்தடுத்து கிர்த்தி ஷெட்டிக்கு தோல்வியாக அமைந்து விட்ட நிலையில் அடுத்தபடியாக தெலுங்கில் நடித்துள்ள ஆ அம்மை குறிஞ்சி மீக்கு செப்பளி என்ற படத்தை பெரிய அளவில் தான் எதிர்பார்த்திருப்பதாக தெரிவித்திருக்கிறார் கிர்த்தி ஷெட்டி. இந்த படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. அதோடு, தற்போது பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வணங்கான், நாகசைதன்யா நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கும் படத்திலும் தற்போது கிருத்தி ஷெட்டி நடித்து வருகிறார்.