புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
1980களில் முன்னணியில் இருந்த மலையாள இயக்குனர் ஜி.எஸ்.பணிக்கர். இகாகினி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். ஷோபா, இந்திரபாலன், ரவிமேனன் உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் பல விருதுகளைப் பெற்றது. இதை தொடர்ந்து வாசரஸய்யா, சகியன்டே மகன், பிராகிரிதி மனோகரி, பூத்தன்பாண்டி , பாண்டவபுரம் உட்பட பல படங்களை இயக்கினார்.
பின்னர் சொந்தமாக படம் தயாரித்த பணிக்கர் அதன் மூலம் ஏற்பட்ட பொருளாதார சிக்கல் காரணமாக சினிமாவை விட்டு விலகினார். நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மிட் சம்மர் ட்ரீம்ஸ் என்ற படத்தை இயக்குவதாக அறிவித்தார். ஆனால் அந்த படம் தொடங்க இருந்த நேரத்தில் அவருக்கு புற்று நோய் பாதிப்பு கண்டறியப்பட்டது.
இதன் காரணமாக படத்தை தொடங்காமல் திருவனந்தபுரம் ஆற்றிங்கல் பகுதியில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். நோய் தாக்கம் அதிகமாகவே சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி நேற்று காலமானார். அவரது மறைவுக்கு மலையாள திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.