போட்டியின்றி இணைச் செயலாளராக தேர்வான் ‛திரிஷ்யம்' நடிகை | 36 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி படத்திற்கு 'ஏ' சான்றிதழ் | இரண்டாவது முறை தேசிய விருது பெறும் ஊர்வசி | தேசிய விருது வென்றவர்களுக்கு கமல்ஹாசன் வாழ்த்து | வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் |
கடந்த ஒரு வருடமாகவே பான் இந்தியா என்கிற வார்த்தை தென்னிந்திய திரையுலகில் மட்டுமல்ல, பாலிவுட்டையும் சேர்த்து ஆட்டி வைத்து வருகிறது. ஹிந்தி படங்கள் தென்னிந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாவதும், அதேபோல தென்னிந்திய படங்கள் பாலிவுட்டில் வெளியாவதும் என பல இயக்குனர்கள் மற்றும் ஹீரோக்கள் பான் இந்தியா படங்களில் நடிப்பதை விரும்புகின்றனர். இந்த நிலையில் பான் இந்தியா என்பதையும் தாண்டி உலக அளவில் செல்லுங்கள் என தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார் மலையாள நடிகர் குஞ்சாக போபன்.
குஞ்சாக்கோ போபன் மலையாளத்தில் நடித்த அறிவிப்பு என்கிற படம் தற்போது லோகர்னோவில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில் போட்டி பிரிவில் கலந்து கொண்டுள்ளது. இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக லோகர்னோ வந்துள்ள குஞ்சாகோ போபன் இது குறித்து கூறும்போது, “எனது 25 வருட திரையுலக பயணத்தில் முதன்முறையாக ஒரு சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்கிறேன்” என்று கூறியுள்ளார். அதுமட்டுமல்ல இனி பான் இந்தியா என்பதை விட 'கோ குளோபல்' என்று அனைவரும் ஆசைப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார் குஞ்சாகோ போகன்.