புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
கடந்த ஒரு வருடமாகவே பான் இந்தியா என்கிற வார்த்தை தென்னிந்திய திரையுலகில் மட்டுமல்ல, பாலிவுட்டையும் சேர்த்து ஆட்டி வைத்து வருகிறது. ஹிந்தி படங்கள் தென்னிந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாவதும், அதேபோல தென்னிந்திய படங்கள் பாலிவுட்டில் வெளியாவதும் என பல இயக்குனர்கள் மற்றும் ஹீரோக்கள் பான் இந்தியா படங்களில் நடிப்பதை விரும்புகின்றனர். இந்த நிலையில் பான் இந்தியா என்பதையும் தாண்டி உலக அளவில் செல்லுங்கள் என தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார் மலையாள நடிகர் குஞ்சாக போபன்.
குஞ்சாக்கோ போபன் மலையாளத்தில் நடித்த அறிவிப்பு என்கிற படம் தற்போது லோகர்னோவில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில் போட்டி பிரிவில் கலந்து கொண்டுள்ளது. இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக லோகர்னோ வந்துள்ள குஞ்சாகோ போபன் இது குறித்து கூறும்போது, “எனது 25 வருட திரையுலக பயணத்தில் முதன்முறையாக ஒரு சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்கிறேன்” என்று கூறியுள்ளார். அதுமட்டுமல்ல இனி பான் இந்தியா என்பதை விட 'கோ குளோபல்' என்று அனைவரும் ஆசைப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார் குஞ்சாகோ போகன்.