50 ஆண்டுகளுக்குபின் 150வது நாளை கொண்டாடும் படம் எது தெரியுமா? | சிவகார்த்திகேயன் வளர்ச்சி எப்படி : கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில் | மாஸ்க் பட ரிசல்ட் நிலவரம் : ஆண்ட்ரியா வீட்டு நிலைமை? | அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் | பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் | 4 வருடங்களுக்கு பிறகு வெளியானது 'பேமிலி மேன் 3' | 8 மணி நேர வேலை: ஓங்கி ஒலிக்கும் நடிகைகளின் குரல் | சர்வதேச திரைப்பட விழாவில் 'அமரன்' டீம் |

மலையாளத்தில் மகேஷிண்டே பிரதிகாரம் என்கிற படத்தில் பஹத் பாசிலுக்கு ஜோடியாக அறிமுகமானவர் அபர்ணா பாலமுரளி. தமிழில் வெளியான சூரரைப்போற்று படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமான அபர்ணா பாலமுரளி, அந்த படத்தில் நடித்ததற்காக சமீபத்தில் சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டதன் மூலம் முன்னணி நடிகையாகவும் உயர்ந்துள்ளார்... இந்த நிலையில் அவர் மலையாளத்தில் மீண்டும் பிஸியான நடிகையாக மாறியுள்ளார்.
அந்த வகையில் மலையாள இளம் நடிகர் ஆசிப் அலியுடன் தொடர்ந்து நான்காவது முறையாக ஜோடி சேர்ந்து நடிக்கிறார் அபர்ணா பாலமுரளி. ஏற்கனவே ஆசிப் அலி நடித்த காக்சி அம்மணிப்பிள்ள என்கிற படத்தை இயக்கிய டிஞ்சித் என்பவர் தான் இந்த படத்தையும் இயக்குகிறார். பொதுவாக மலையாள திரையுலகில் கதாசிரியர்களுடன் இணைந்து இயக்குனர்கள் பயணித்து வரும் நிலையில் காக்சி அம்மணிப்பிள்ள படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பகுல் ரமேஷ் என்பவர் தான் இந்தப்படத்திற்கு கதை எழுதியுள்ளார் என்பது ஆச்சர்யமான ஒன்று.




