டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

மலையாள சினிமாவிலும், சின்னத்திரையிலும் நடித்து வருகிறவர் அஸ்வதி பாபு. கொச்சியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். தமிழ் நாட்டில் மீரா மிதுன், ஆந்திராவில் ஸ்ரீரெட்டி போன்று மலையாளத்தில் பரபரப்புக்கு பெயர் பெற்றவர் இவர்.
4 ஆண்டுகளுக்கு முன் தனது வீட்டில் பாலியல் தொழில் நடத்தியதாக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் சிறை தண்டனை பெற்று பின்பு விடுதலை ஆனார். மது போதைக்கு அடிமையான அஸ்வதி பாபு பலமுறை போதை பொருளுடன் போலீசிடம் சிக்கி உள்ளார். இது தொடர்பான வழக்குகளும் நடந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை அஸ்வதி தனது புதிய காதலன் நவுவலுடன் கொச்சி நகருக்குள் காரில் பயணித்துக் கொண்டிருந்தார். கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சென்றது. இதை கண்ட பொதுமக்கள் காரை துரத்தி பிடிக்க முயன்றனர். அப்போது கார் டயர் வெடித்து நின்றது. அதில் இருந்து இறங்கிய அஸ்வதியும், காதலன் நவுபலும் இறங்கி ஓடி தலைமறைவானார்கள். விரைந்து வந்த போலீசார் மறைந்திருந்த இருவரையும் தேடிக் கண்டுபிடித்து கைது செய்தனர். மருத்துவ பரிசோதனையில் இருவரும் போதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனால் இருவரையும் கைது செய்த போலீசார் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகிறார்கள்.




