நடிகை ராதிகாவுக்கு டெங்கு : மருத்துவமனையில் அனுமதி | மோசடி வழக்கு : காமெடி நடிகர் சீனிவாசன் கைது | பிரபாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் | சோசியல் மீடியாவில் 7 ஆண்டுகளாக அவதூறு பரப்பிய பெண்ணை அடையாளப்படுத்திய பிரித்விராஜ் மனைவி | அசினுடன் நடந்த டெஸ்ட் ஷூட் : பஹத் பாசிலுக்கு கைமாறிய பிரித்விராஜ் படம் | நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு |
தெலுங்கு திரையுலகில் நாகார்ஜுனாவின் மகனாக வாரிசு நடிகராக அறிமுகமானவர் நடிகர் நாகசைதன்யா. ஏ மாயா சேசாவே என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தபோது இவருக்கும் சமந்தாவுக்கும் இடையே காதல் மலர்ந்து, கடந்த சில வருடங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். மூன்று வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பரஸ்பரம் இருவரும் பிரிவதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவித்து விவாகரத்திற்கும் விண்ணப்பித்துள்ளனர்.
இதை தொடர்ந்து சமந்தா பிஸியான நடிகையாகவும் வழக்கத்திற்கு மாறான கிளாமர் மற்றும் அதிரடி கதாபாத்திரங்களிலும் சுதந்திரமாக நடித்து வருகிறார். இன்னொரு பக்கம் நாகசைதன்யா தானுண்டு தன் படங்கள் உண்டு என்று அமைதியாக வலம் வருவது போல் தெரிந்தாலும் சமீப நாட்களாக பாலிவுட் நடிகை ஷோபிதா துலிபாலா என்பவருடன் நெருக்கமாக பழகி வருகிறார் என டோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற மேஜர் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் ஷோபிதா துலிபாலா. இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்காக ஹைதராபாத்திற்கு அடிக்கடி வருகை தந்த ஷோபிதா துலிபாலாவுடன் பலமுறை ஹோட்டல்களில் நாகசைதன்யா சந்திப்பு நடத்தியதாகவும் தற்போது ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் புதிதாக கட்டி வரும் வீட்டிற்கும் அவரை அழைத்துச் சென்றதாகவும் கூட சில தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடித்ததாலோ அல்லது ஏதாவது நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொள்ளும் பட்சத்திலோ இந்த தகவல் உறுதியாக மாற வாய்ப்புள்ளது என்றும் சொல்லப்படுகிறது.