கவினுக்கு ஜோடியான பிரியங்கா மோகன் | தெலுங்கு படத்தில் விலைமாதுவாக நடிக்கும் கயாடு லோஹர் | பிரேமலு ஹீரோவின் புதிய படப்பிடிப்பை துவங்கி வைத்த பஹத் பாசில் | கூலி ரிலீஸ் தேதி கவுன்ட் டவுன் போஸ்டர் வெளியானது | “என் உயிருக்கு ஏதாவது ஆனால்...” : நடிகர் பாலாவின் 3-வது மனைவி மருத்துவமனையில் அனுமதி | அடுத்த ஆண்டு துவக்கத்தில் விக்ரமை இயக்கும் பிரேம்குமார் | நடிகை கியாரா அத்வானிக்கு பெண் குழந்தை பிறந்தது | 'குட் பேட் அக்லி' வெளியாகி மூன்று மாதங்கள் : இன்னும் வராத அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு | 3 நாட்கள் தியேட்டர் வளாகத்திற்குள் ‛நோ' விமர்சனம் : விஷால் வேண்டுகோள் | ரூ.6 கோடியை திருப்பி கேட்கும் தயாரிப்பு நிறுவனம் : பதிலுக்கு ரூ.9 கோடி நஷ்ட ஈடு கேட்கிறார் ரவி மோகன் |
மலையாளத்தில் மம்முட்டி நடிக்கும் அடுத்தடுத்த படங்கள் சீரான இடைவெளியில் ஒரு பக்கம் வெளியாகி கொண்டிருக்க இன்னொரு பக்கம் தொடர்ந்து புதிய படங்களின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார் மம்முட்டி. அந்தவகையில் மம்முட்டி தற்போது திரில்லர் படம் ஒன்றில் நடிக்கிறார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் டினோ டென்னிஸ் என்பவர் இயக்குகிறார். இவர் பிரபல மலையாள கதாசிரியர் கலூர் டென்னிஸின் மகன் ஆவார்.
எண்பதுகளில் துவங்கி பிரபலமான கதாசிரியராக வலம் வந்த கலூர் டென்னிஸ், மம்முட்டி மோகன்லால், சுரேஷ்கோபி ஆகியோரின் பல படங்களுக்கு கதை எழுதியவர். குறிப்பாக தயாரிப்பாளர்களின் முடிவுகளில் ஹீரோக்களின் குறுக்கீடு இருக்கக்கூடாது என்பதில் பிடிவாதமாக இருப்பவர் கலூர் டென்னிஸ். அதனாலேயே மம்முட்டி நடித்த இருபத்தி நான்கு படங்களுக்கு கதை எழுதிய இவர் ஒரு கட்டத்தில், கருத்து வேறுபாடு காரணமாக 12 வருடங்கள் மம்முட்டியிடம் இருந்து ஒதுங்கியே இருந்தார்.
இந்தநிலையில் இந்த கருத்து வேறுபாடுகளை மனதில் வைத்துக்கொள்ளாத மம்முட்டி அவரது மகனை தனது படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகப்படுத்துவது ஆச்சரியமான ஒன்று. இதேபோல சில வருடங்களுக்கு முன்பு பிரபல கதாசிரியர் ரெஞ்சி பணிக்கரின் மகனான நிதின் ரெஞ்சி பணிக்கர் என்பவரையும் கசபா என்கிற படத்தின் மூலம் இயக்குனராக மம்முட்டி அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.