டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் | பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் | ‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி |
மலையாளத்தில் மம்முட்டி நடிக்கும் அடுத்தடுத்த படங்கள் சீரான இடைவெளியில் ஒரு பக்கம் வெளியாகி கொண்டிருக்க இன்னொரு பக்கம் தொடர்ந்து புதிய படங்களின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார் மம்முட்டி. அந்தவகையில் மம்முட்டி தற்போது திரில்லர் படம் ஒன்றில் நடிக்கிறார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் டினோ டென்னிஸ் என்பவர் இயக்குகிறார். இவர் பிரபல மலையாள கதாசிரியர் கலூர் டென்னிஸின் மகன் ஆவார்.
எண்பதுகளில் துவங்கி பிரபலமான கதாசிரியராக வலம் வந்த கலூர் டென்னிஸ், மம்முட்டி மோகன்லால், சுரேஷ்கோபி ஆகியோரின் பல படங்களுக்கு கதை எழுதியவர். குறிப்பாக தயாரிப்பாளர்களின் முடிவுகளில் ஹீரோக்களின் குறுக்கீடு இருக்கக்கூடாது என்பதில் பிடிவாதமாக இருப்பவர் கலூர் டென்னிஸ். அதனாலேயே மம்முட்டி நடித்த இருபத்தி நான்கு படங்களுக்கு கதை எழுதிய இவர் ஒரு கட்டத்தில், கருத்து வேறுபாடு காரணமாக 12 வருடங்கள் மம்முட்டியிடம் இருந்து ஒதுங்கியே இருந்தார்.
இந்தநிலையில் இந்த கருத்து வேறுபாடுகளை மனதில் வைத்துக்கொள்ளாத மம்முட்டி அவரது மகனை தனது படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகப்படுத்துவது ஆச்சரியமான ஒன்று. இதேபோல சில வருடங்களுக்கு முன்பு பிரபல கதாசிரியர் ரெஞ்சி பணிக்கரின் மகனான நிதின் ரெஞ்சி பணிக்கர் என்பவரையும் கசபா என்கிற படத்தின் மூலம் இயக்குனராக மம்முட்டி அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.