எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
மலையாள திரையுலகில் தற்போது மிகவும் அதிக அளவில் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றுதான் ‛சிபிஐ 5 ;தி பிரைன்'. மம்முட்டி நடிப்பில் கடந்த 1988ல் இருந்து இதுவரை நான்கு பாகங்களாக வெளியாகி உள்ள சிபிஐ படத்தின் ஐந்தாம் பாகமாக இது உருவாகி வருகிறது. நான்கு பாகங்களுக்கும் கதை எழுதிய கதாசிரியர் எஸ்.என்.சுவாமி இந்த பாகத்திற்கும் கதை எழுத, நான்கு பாகங்களையும் இயக்கிய இயக்குனர் கே.மது தான் இந்த பாகத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துவிட்டது. இந்த நிலையில் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளின்போது படப்பிடிப்பில் மம்முட்டி நடித்த காட்சிகளை திரையில் பார்த்து ரொம்பவே வியந்து போயுள்ளார் இயக்குனர் மது.
தனது வியப்பை வெளிப்படுத்தும் விதமாக அவர் கூறும்போது, 'ஹாலிவுட்டில் ஜேம்ஸ்பாண்ட் படங்களில் ஜேம்ஸ்பாண்ட் ஆக நடிப்பவர்கள் பல பேர் மாறிவிட்டனர். ஆனால் சிபிஐ படத்தில் ஐந்தாம் பாகத்திலும் மம்முட்டி தான் நடிக்கிறார். சிபிஐ முதல் பாகம் வெளியானபோது பார்ப்பதற்கு எப்படி காட்சி அளித்தாரோ. 34 வருடங்கள் கழித்து இப்போது ஐந்தாம் பாகம் உருவாகும்போதும் அந்த சேதுராம ஐயர் கதாபாத்திரத்தில் அதேபோன்ற உருவத்தை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்தியுள்ளார் மம்முட்டி" என்று தனது பெருமிதத்தை வெளிப்படுத்தியுள்ளார் இயக்குனர் மது.