எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் தான் பூரி ஜெகன்நாத். தற்போது விஜய் தேவரகொண்டா நடிப்பில் லைகர் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இதைத்தொடர்ந்து அவரை வைத்தே மீண்டும் ஜனகணமன என்கிற படத்தையும் இயக்க உள்ளார். இந்த நிலையில் தற்போது சிரஞ்சீவி நடித்துவரும் காட்பாதர் படம் மூலமாக நடிகராகவும் அறிமுகமாகிறார் பூரி ஜெகன்நாத். படப்பிடிப்புத் தளத்திற்கு அவரை பூங்கொத்து கொடுத்து வரவேற்றுள்ள சிரஞ்சீவி இந்த தகவலை மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
மலையாளத்தில் பிரித்விராஜ் டைரக்சனில் மோகன்லால் நடிப்பில் மிகப்பெரிய வெற்றிபெற்ற லூசிபர் திரைப்படம் தான் தற்போது காட்பாதர் என்கிற பெயரில் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இந்த படத்தை இயக்குனர் மோகன் ராஜா இயக்கி வருகிறார். இந்த படத்தில் மிக முக்கியமான வேடம் ஒன்றில் பாலிவுட் நடிகர் சல்மான்கான் நடிக்கிறார். சமீபத்தில் அவர் தனது படப்பிடிப்பை முடித்துவிட்டு விடைபெற்ற நிலையில் தற்போது பூரி ஜெகன்நாத் முதல் முறையாக ஒரு நடிகராக இந்தப் படத்தில் இணைந்துள்ளார்.
இதில் இன்னொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் சிரஞ்சீவியின் மகனான நடிகர் ராம்சரணை முதன்முறையாக சிறுத்தா என்கிற படம் மூலம் ஹீரோவாக அறிமுகம் செய்தவர் இயக்குனர் பூரி ஜெகன்நாத் தான். தற்போது அவரையே தனது படத்தில் நடிகராக அறிமுகப்படுத்துகிறார் சிரஞ்சீவி.