எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ஜன கண மன திரைப்படம் வரும் ஏப்-28ஆம் தேதி வெளியாக உள்ளது. குயீன் படத்தை இயக்கிய டிஜோ ஜோஸ் ஆண்டனி இந்தப்படத்தை இயக்கியுள்ளார். மம்தா மோகன்தாஸ், ஸ்ரீதிவ்யா கதாநாயகிகளாக நடித்துள்ளனர். சமீபத்தில் இந்தப்படத்தின் டிரைலர் வெளியாகி, டிரைலரின் இறுதிக்காட்சி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.
ஒரு கால் சற்றே ஊனமான நிலையில் இருக்கும் பிரித்விராஜ், அரசியல்வாதி ஒருவரின் அலுவலகத்திற்கு சென்று கோரிக்கை மனு அளிப்பது போலவும் அதை கொடுத்துவிட்டு அந்த அறையை விட்டு வெளியே வந்தவுடன் அறைக்குள் வெடிகுண்டு வெடித்து சிதறுவது போலவும் அந்த காட்சி தத்ரூபமாக இடம் பெற்றிருந்தது தான் அந்த அதிர்ச்சிக்கு காரணம்.
ஆனால் இந்த வெடிகுண்டு காட்சியை விஎப்எக்ஸ் உதவி இல்லாமல் நிஜமாகவே படமாக்கியுள்ளோம் என கூறியுள்ளார் இயக்குனர் டிஜோ ஜோஸ் ஆண்டனி.. இந்த காட்சியின் முக்கியத்துவம் பற்றி தெரிந்ததுமே, இதனை லைவாகவே எடுக்கலாம் என சொல்லி ரிஸ்க் எடுத்து நடித்தாராம் பிரித்விராஜ்.. இரண்டுமுறை ரிகர்சல் பார்க்கப்பட்டு மூன்றாவது டேக்கில் இந்த காட்சி படமாக்கப்பட்டதாம்..