அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ஜன கண மன திரைப்படம் வரும் ஏப்-28ஆம் தேதி வெளியாக உள்ளது. குயீன் படத்தை இயக்கிய டிஜோ ஜோஸ் ஆண்டனி இந்தப்படத்தை இயக்கியுள்ளார். மம்தா மோகன்தாஸ், ஸ்ரீதிவ்யா கதாநாயகிகளாக நடித்துள்ளனர். சமீபத்தில் இந்தப்படத்தின் டிரைலர் வெளியாகி, டிரைலரின் இறுதிக்காட்சி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.
ஒரு கால் சற்றே ஊனமான நிலையில் இருக்கும் பிரித்விராஜ், அரசியல்வாதி ஒருவரின் அலுவலகத்திற்கு சென்று கோரிக்கை மனு அளிப்பது போலவும் அதை கொடுத்துவிட்டு அந்த அறையை விட்டு வெளியே வந்தவுடன் அறைக்குள் வெடிகுண்டு வெடித்து சிதறுவது போலவும் அந்த காட்சி தத்ரூபமாக இடம் பெற்றிருந்தது தான் அந்த அதிர்ச்சிக்கு காரணம்.
ஆனால் இந்த வெடிகுண்டு காட்சியை விஎப்எக்ஸ் உதவி இல்லாமல் நிஜமாகவே படமாக்கியுள்ளோம் என கூறியுள்ளார் இயக்குனர் டிஜோ ஜோஸ் ஆண்டனி.. இந்த காட்சியின் முக்கியத்துவம் பற்றி தெரிந்ததுமே, இதனை லைவாகவே எடுக்கலாம் என சொல்லி ரிஸ்க் எடுத்து நடித்தாராம் பிரித்விராஜ்.. இரண்டுமுறை ரிகர்சல் பார்க்கப்பட்டு மூன்றாவது டேக்கில் இந்த காட்சி படமாக்கப்பட்டதாம்..