துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் பிரித்விராஜ் நடிப்பில் கராச்சி 81 என்கிற படம் உருவாக இருப்பதாக ஒரு தகவல் வெளியானது. மலையாள சினிமா இதுவரை பெரிய அளவில் தொடாத உளவாளி சப்ஜெக்ட்டை மையப்படுத்தி இதன் கதையை உருவாக்கியுள்ளார் இயக்குனர் கே.எஸ்.பாவா.
அதன்பிறகு நான்கு வருடங்கள் படத்தை பற்றிய தகவலே இல்லாமல் இருந்த நிலையில் கடந்த 2020 ஜனவரியில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டதுடன் இந்த படத்தில் டொவினோ தாமஸ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்றும் அறிவிப்பு வெளியானது. அதன்பிறகும் இரண்டு வருடங்கள் ஓடிவிட்ட நிலையில் இந்த படம் கைவிடப்பட்டதோ என்கிற சந்தேகம் ரசிகர்களிடம் எழுந்துள்ளது.
இந்தநிலையில் இந்த படத்தின் டிஸ்கஷன் இப்போதும் நடந்து கொண்டிருக்கிறது என்பதை உணர்த்தும் விதமாக பிரித்விராஜ் டொவினோ தாமஸ், தயாரிப்பாளர் ஆன்டோ ஜோசப் ஆகியோருடன் இணைந்து லேட்டஸ்ட்டாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இயக்குனர் கே.எஸ்.பாவா.
இந்த வருடத்திற்குள் இந்த படத்தின் படப்பிடிப்பை துவக்குவதற்கு திட்டமிட்டுள்ளார்களாம் பாகிஸ்தானிலேயே சென்று இந்தப்படத்தின் படப்பிடிப்பை நடத்த முதலில் திட்டமிட்டு இருந்தவர்கள் தற்போதுள்ள சூழ்நிலை காரணமாக இந்திய எல்லை பகுதியிலேயே படப்பிடிப்பு நடத்தவும் முடிவு செய்துள்ளார்களாம்..