விஜய் பாணியை பின்பற்றினால் நல்லது: 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூ | விரைவில் 'லக்கி பாஸ்கர் 2': வெங்கி அட்லூரி அப்டேட் | கூலி திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாவதில் புதிய சிக்கல்? | காமெடி நடிகரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு 50 லட்சம் தர பிரபாஸ் வாக்குறுதி | படம் என்ன ஜானர் என்று ரிலீஸுக்கு முன்பே சொல்லிவிடுங்கள் ; சசிகுமார் வேண்டுகோள் | 'தொடரும்' கெட்டப்பில் புரோமோ வீடியோவுடன் பிக்பாஸ் சீசன் 7 அறிவிப்பை வெளியிட்ட மோகன்லால் | இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் மொத்தமாக நீக்கிய ரன்வீர் சிங் ; ரசிகர்கள் கவலை | சூர்யா பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் தெலுங்கு 'அயன்' | அசோக் செல்வன் புதிய பட அப்டேட்! | 'பையா' பட தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகிறது! |
கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு நடிகை கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு மூன்று மாத சிறை தண்டனைக்கு பிறகு ஜாமினில் வெளிவந்தார்.. அதன்பிறகு கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் கடந்து விட்ட நிலையில் சில மாதங்களுக்கு முன் திலீப் மீது விசாரணை அதிகாரிகளை கொல்ல முயற்சி செய்ததாக புதிய வழக்கு பதியப்பட்டது.. இந்த வழக்கில் தான் கைது செய்யப்படாமல் இருப்பதற்காக முன்ஜாமின் கேட்டு விண்ணப்பித்தார் திலீப்.
கடந்த டிசம்பர் மாதம் துவங்கிய அவரது முன்ஜாமீன் போராட்டம் நீண்ட இழுபறிக்குப் பின் முடிவுக்கு வந்து சமீபத்தில் தான் அவருக்கு முன் ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில் தற்போது தன் மீது எந்த முகாந்திரமும் இல்லாமல் பதியப்பட்ட இந்த வழக்கை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும் அதற்கு வாய்ப்பில்லை என்றால் இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் திலீப் தற்போது புதிய மனு ஒன்றை கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.