பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு நடிகை கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு மூன்று மாத சிறை தண்டனைக்கு பிறகு ஜாமினில் வெளிவந்தார்.. அதன்பிறகு கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் கடந்து விட்ட நிலையில் சில மாதங்களுக்கு முன் திலீப் மீது விசாரணை அதிகாரிகளை கொல்ல முயற்சி செய்ததாக புதிய வழக்கு பதியப்பட்டது.. இந்த வழக்கில் தான் கைது செய்யப்படாமல் இருப்பதற்காக முன்ஜாமின் கேட்டு விண்ணப்பித்தார் திலீப்.
கடந்த டிசம்பர் மாதம் துவங்கிய அவரது முன்ஜாமீன் போராட்டம் நீண்ட இழுபறிக்குப் பின் முடிவுக்கு வந்து சமீபத்தில் தான் அவருக்கு முன் ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில் தற்போது தன் மீது எந்த முகாந்திரமும் இல்லாமல் பதியப்பட்ட இந்த வழக்கை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும் அதற்கு வாய்ப்பில்லை என்றால் இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் திலீப் தற்போது புதிய மனு ஒன்றை கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.