படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

மலையாள திரையுலகில் அங்கமாலி டைரீஸ், ஜல்லிக்கட்டு உள்ளிட்ட வித்தியாசமான படங்களை இயக்கி பெயர் பெற்றவர் இயக்குனர் லிஜோ ஜோஸ் பள்ளிசேரி. தற்போது மம்முட்டியை வைத்து நண்பகல் நேரத்து மயக்கம் என்கிற படத்தை இயக்கி வருகிறார். சில மாதங்களுக்கு முன் இவரது இயக்கத்தில் சுருளி என்கிற படம் ஒடிடியில் வெளியானது.
காட்டிற்குள் ஒளிந்திருக்கும் கொள்ளையர்களை தேடி போலீசார் செல்வது போல இந்தப்படத்தின் கதை அமைந்திருந்தது. அதேசமயம் இந்த படத்தில் அதிகப்படியான இடங்களில் ஆபாச வார்த்தைகள் இடம் பெற்றுள்ளதாகவும் படத்தை ஒடிடியில் ஒளிபரப்ப கூடாது என்றும் திருச்சூரை சேர்ந்த ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்..
ஒடிடியில் வெளியான இந்தப்படம் சென்சார் செய்யப்படாமலேயே வெளியானது என்பதால் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி அதிகாரிகள் குழு ஒன்று இந்தப்படத்தை பார்த்து தங்களது விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தது. இதையடுத்து, இந்த படத்தை ஒடிடியில் வெளியிட எந்த தடையும் இல்லை என நீதிபதி தீர்ப்பளித்தார்.
அதுமட்டுமல்ல நீதிபதி தனது தீர்ப்பில் கூறும்போது, “காட்டிற்குள் ஒளிந்து வாழும் கொள்ளையர்கள் நல்லவிதமான வாரத்தைகளை தான் பேசுவார்கள் என எதிர்பார்க்க முடியுமா..? ஒரு படத்தை இயல்பாக உருவாக்க வேண்டும் என்கிற இயக்குனரின் படைப்பு சுதந்திரத்தில் நாம் ஓரளவுக்கு மேல் குறுக்கிட முடியாது.. தவிர இந்தப்படம் பார்வையாளரே விரும்பினால் மட்டும் பணம் கட்டி விரும்பி பார்க்கும் விதமாக வெளியாகி இருக்கிறதே தவிர, யாரையும் கட்டாயப்படுத்தி படம் பார்க்க சொல்லவில்லை. அதனால் இந்த வழக்கை தங்களது சொந்த பப்ளிசிட்டிக்காவே தொடர்ந்துள்ளார்கள் என தெரிய வருகிறது” என மனுதாரருக்கு குட்டும் வைத்து இந்தப்படத்தின் மீதான தடையை நீக்கி உத்தரவிட்டார்.