லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
மலையாளத்தில் வெளியான அங்கமாலி டைரீஸ், ஈ மா யூ, ஜல்லிக்கட்டு என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கியவர் லிஜோ ஜோஸ் பள்ளிசேரி. மலையாள ரசிகர்கள் மட்டுமல்லாது கோலிவுட், பாலிவுட் என மொழி தாண்டிய படைப்பாளிகளையும் கவர்ந்தவர். தற்போது முதன்முறையாக மம்முட்டியை வைத்து நண்பகல் நேரத்து மயக்கம் என்கிற படத்தை இயக்கி முடித்துவிட்டார். கதை பிடித்துப்போனதால் இந்தப்படத்தை மம்முட்டியே தயாரிக்கவும் செய்துள்ளார்.
தற்போது இன்னொரு ஆச்சர்யமாக இந்தப்படம் வெளிவருவதற்குள்ளாகவே லிஜோ ஜோஸ் பள்ளிசேரியின் டைரக்சனில் அடுத்து ஒரு படத்திலும் நடிக்கிறார் மம்முட்டி. ஆனால் இது முழு நீள படமல்ல. பிரபல மலையாள எழுத்தாளரும் இயக்குனருமான எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதிய பத்து சிறுகதைகளை மையப்படுத்தி பத்து படங்களின் தொகுப்பாக ஆந்தாலாஜி படம் ஒன்று தயாராகிறது. அதில் ஒரு கதையாக இவர்களது படமும் உருவாகிறது.