கார்த்திக் சுப்பராஜ், சிவகார்த்திகேயன் புதிய கூட்டணி | தமன்னாவை ஏமாற்றிய ஒடேலா- 2! | சமூக வலைதளங்களில் இருந்து மீண்டும் பிரேக் எடுத்த லோகேஷ் கனகராஜ் | மனைவிகிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருந்தா வெளியில போய் ஜெயிக்க முடியாது! -நடிகை ரோஜா | டி.ராஜேந்தரின் பாடலை தழுவி உருவாக்கப்பட்ட சூர்யாவின் ரெட்ரோ பட பாடல்! | முன்னேறிச் செல்லுங்கள்- தமிழக கிரிக்கெட் வீரருக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு! | புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் |
கொரோனா தாக்கம் நிலவியதால் கடந்த ஆண்டு முதல் கடந்த மாதம் வரை மோகன்லால் மற்றும் பிரித்விராஜ் இருவரின் படங்களும் ஓடிடி தளத்தில் தான் வெளியாகி வந்தன. மோகன்லால் நடித்த மரைக்கார் படம் மட்டும் சில பல இழுபறிகளுக்கு பின்னர் நேரடியாகவே தியேட்டர்களில் வெளியானது.. இனி இவர்கள் படங்கள் தியேட்டர்களில் மட்டும் தான் வெளியாகும் என சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது மோகன்லாலின் ப்ரோ டாடி படம் ஓடிடியில் வெளியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லூசிபர் படத்தை தொடர்ந்து பிரத்விராஜ் டைரக்சனில் மோகன்லால் இரண்டாவது முறையாக நடித்துள்ள இந்த ப்ரோ டாடி படத்தில் பிரித்விராஜும் இன்னொரு ஹீரோவாக நடித்துள்ளார். இந்தப்படம் ஜன-26ஆம் தேதி வெளியாகும் என தெரிகிறது.
அதேசமயம் தனது ஆஸ்தான இயக்குனரான பி.உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள ஆராட்டு திரைப்படம் தியேட்டர்களில் தான் வெளியாக உள்ளது. சமீபத்தில் இந்தப்படத்தின் சென்சார் வேலைகள் முடிந்து படத்திற்கு 'யு' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தின் ரிலீஸ் தேதி பிப்-10 என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ப்ரோ டாடி காமெடி படமாகவும் ஆராட்டு ஆக்சன் படமாகவும் உருவாகியுள்ளது.