கார்த்திக் சுப்பராஜ், சிவகார்த்திகேயன் புதிய கூட்டணி | தமன்னாவை ஏமாற்றிய ஒடேலா- 2! | சமூக வலைதளங்களில் இருந்து மீண்டும் பிரேக் எடுத்த லோகேஷ் கனகராஜ் | மனைவிகிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருந்தா வெளியில போய் ஜெயிக்க முடியாது! -நடிகை ரோஜா | டி.ராஜேந்தரின் பாடலை தழுவி உருவாக்கப்பட்ட சூர்யாவின் ரெட்ரோ பட பாடல்! | முன்னேறிச் செல்லுங்கள்- தமிழக கிரிக்கெட் வீரருக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு! | புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் |
மலையாள திரையுலகின் பிரபல இசையமைப்பாளரான கைத்தபுரம் விஸ்வநாதன் நம்பூதிரி இன்று(டிச., 29) காலமானார். 58 வயதான இவர் புற்று நோயால் பாதிக்காப்பட்டு கோழிக்கோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று மதியம் சிகிச்சை பலனின்றி இறந்தார். இவருக்கு கவுரி என்கிற மனைவியும் அதிதி, நர்மதா என்கிற இரு மகள்களும், கேசவன் என்கிற மகனும் உள்ளனர்.
இவர் மலையாள சினிமாவின் பிரபல முன்னணி பாடலாசிரியரும், இசையமைப்பாளருமான கைத்தபுரம் தாமோதரன் நம்பூதிரியின் இளைய சகோதரர் ஆவார். மலையாளத்தில் 1997ல் ஜெயராஜ் இயக்கிய தேசிய விருது படமான களியாட்டம் படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்த கைத்தபுரம் விஸ்வநாதன் நம்பூதிரி, கண்ணகி, திலகம், ஒர்ம மாத்திரம் என கிட்டத்தட்ட 23 படங்களுக்கு இசையமைத்துள்ளார்.