‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
பங்கராஜூ பட இயக்குனர் கல்யாண் கிருஷ்ணா இயக்கத்தில் சிரஞ்சீவி, த்ரிஷா, சித்து ஜோனலகட்டா, ஸ்ரீ லீலா உள்ளிட்டோர் ஒரு புதிய படத்திற்காக நடிக்க உள்ளனர். இந்த படம் மலையாளத்தில் மோகன்லால், பிரிதிவிராஜ் நடித்து வெளிவந்த ப்ரோ டாடி படத்தின் ரீமேக் என்று தகவல் வெளியாகியுள்ளது.
திருமணமாக ஒரு இளைஞன், ஒரேநேரத்தில் அண்ணனாகவும், அப்பாவாகவும் புரொமோஷன் ஆனால் என்ன நடக்கும் என்பது மாதிரியான கதைகளத்தில் ப்ரோ டாடி படம் வெளிவந்தது. மலையாளத்தில் வரவேற்பை பெற்ற இந்த படத்தை இப்போது சிரஞ்சீவி நடிக்க ரீமேக் செய்ய போகிறார்கள்.
விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கி குறைவான நாட்களிலே படப்பிடிப்பை முடித்து 2024 பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை சிரஞ்சீவி மகள் சுஷ்மிதா தயாரிப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.